நேபாளத்தில் சமூக ஊடகங்களின் மீதான தடை நீக்கம் : ஜென் Z போராட்டம் எதிரொலி - News View

About Us

About Us

Breaking

Tuesday, September 9, 2025

நேபாளத்தில் சமூக ஊடகங்களின் மீதான தடை நீக்கம் : ஜென் Z போராட்டம் எதிரொலி

பேஸ்​புக், யூடியூப், எக்ஸ் உள்​ளிட்ட சமூக வலை​த்தளங்​களுக்கு நேபாள அரசு திடீர் தடை விதித்ததை எதிர்த்து நடைபெற்ற வன்முறையில் 19 பேர் உயி​ரிழந்​தனர். 200 இற்கும்​ மேற்​பட்​டோர் காயமடைந்​தனர். இதனையடுத்து இந்த தடை உத்தரவை நேபாள அரசு மீள பெற்றுள்ளது.

பேஸ்​புக், யூடியூப், எக்ஸ் உள்​ளிட்ட பதிவு செய்​யப்​ப​டாத 26 சமூக வலை​த்தளங்​களை நேபாள அரசு முடக்​கி​யது. இதனால், கடந்த வெள்ளிக்​கிழமையி​லிருந்து அவற்றை பயன்​படுத்த முடியாமல் இளைஞர்​கள் தவித்து வந்தனர்

இதையடுத்து சமூக வலைத்​தளங்​கள் மீதான தடையை விலக்கக் கோரி​யும், நாட்​டில் பரவி​யுள்ள ஊழல் கலாச்​சா​ரத்​துக்கு முற்றுப்புள்ளி வைக்கக் கோரி​யும் நேற்று (08) ஆயிரக்​கணக்​கான இளைஞர்​கள் ஒன்று திரண்டு தலைநகர் காத்​மாண்​டு​வில் பேரணி நடத்​தினர். இந்த கடும் மோதலில் 19 பேர் உயி​ரிழந்​தனர். 200 இற்​கும் மேற்​பட்​டோர் காயமடைந்​தனர்.

இந்த நிலையில் எதிர்பார்க்காத அளவில் ஏராளமான இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால், சமூக ஊடகங்கள் மீது விதிக்கப்பட்ட தடையை நேபாள அரசு மீள பெற்றுள்ளது.

இதனை அந்நாட்டு தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பிரித்வி சுப்பா உறுதிப்படுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment