கைது செய்யப்பட்ட சிறுவனொருவன் பொலிஸ் நிலையத்தில் துன்புறுத்தப்பட்ட விவகாரம் தொடர்பில் தொடுக்கப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு தொடர்பான தீர்ப்பை அறிவிக்கும்போது நீதிவான் ஹதீஸ் ஒன்றை மேற்கோள்காட்டிய சம்பவமொன்று நேற்றுமுன்தினம் (02) கலகெதர நீதிவான் நீதிமன்றில் இடம்பெற்றுள்ளது.
அத்துடன், எவரேனும் சிறுவரொருவரை கைது செய்யும் பொழுது அவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கு முன்னர் 6 மணி நேரங்களுக்குள் அவரது பெற்றோர் அல்லது பாதுகாவலளர்களுடன் சந்திப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அனைத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்குளுக்கும் ஆலோசனை வழங்குமாறு பொலிஸ்மா அதிபருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
16 வயதுடைய சிறுவன் ஒருவனை கைது செய்த ஹத்தரலியத்த பொலிஸார் அவரை சித்திரவதைக்கு உள்ளாக்கியமை தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவுக்கான தீர்ப்பை அறிவித்து இந்த விடயத்தை அறிவித்துள்ளது.
நீதியரசர் ஜனக் டீ சில்வா இந்த தீர்பை அறிவித்துள்ளதுடன் நீதியரசர்களான மேனகா விஜேசுந்தர மற்றும் சம்பத் பி அபேகோன் ஆகியோர் இந்த தீர்ப்பு தொடர்பில் தமது இணக்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
2022ஆம் ஆண்டு இல்ஹாம் அகமட் என்னும் 16 வயது சிறுவன் ஒருவர் தங்க ஆபரண திருட்டு குற்றச்சாட்டின் பெயரில் ஹதரலியத்த பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
எனினும் கலகெதர நீதிவான் நீதிமன்றத்தில் குறித்த சிறுவன் ஆஜர்படுத்தப்பட்டு குறித்த வழக்கில் இருந்து நீதிமன்றத்தால் விடுவித்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
எவ்வாறாயினும் பொலிஸார் குறித்த சிறுவனைக் கைது செய்தபோது அந்த சிறுவனை தாக்கியுள்ளதோடு அவரது கண்ணில் மிளகாய்சாறு பிழிந்து சித்திரவதை செய்யததாக உயர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த சிறுவனும் சிறுவனின் தாயாரான சித்தி நிஹாரா என்பவரும் மனுதாரர்களாக பெயரிடப்பட்டு தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு உயர் நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டு நேற்றுமுன்தினம் அதன் தீர்ப்பு அறிவிக்கப்பட்டது.
குறித்த தீர்ப்பை அறிவித்த உயர் நீதிமன்றம் குறித்த சிறுவனுக்கு ஹதரலியத்த பொலிஸ் நிலையத்தினுடைய அப்போதை பொறுப்பதிகாரி தனது சொந்த நிதியிலிருந்து 3 இலட்சம் ரூபா நஷ்டஈடு செலுத்த வேண்டும் எனவும் சிறுவனின் தாயாருக்கு தனது சொந்த நிதியிலிருந்து குறித்த பொலிஸ் பொறுப்பதிகாரி 75 ஆயிரம் ரூபா செலுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.
இந்த தீர்பை எழுதியிருக்கும் நீதியரசர் ஜனக் டி சில்வா தாய் மற்றும் பிள்ளைகளுக்கிடையிலான தொடர்பை இஸ்லாம் மற்றும் பெளத்த மதங்களில் குறிப்பிடப்பட்டுள்ள சித்தாத்தங்களை அடிப்படையாகக் கொண்டு விளக்கியுள்ளார்.
குறிப்பாக நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லாம் அவர்களுடைய ஹதீஸ் ஒன்றை குறித்த தீர்ப்பில் இணைத்துள்ள நீதியரசர் ஜனக் டி சில்வா, நபிகளாரிடம் ஒருவர் வந்து யுத்தத்திற்கு செல்ல அனுமதி கோரியபோது உங்களுக்கு தாயார் இருக்கின்றாரா என்று கேட்டு, தாயாரின் காலடியிலேயே சொர்க்கம் இருக்கிறது என கூறியதாக தெரிவிக்கப்படும் ஹதீஸை குறித்த தீர்ப்பில் இணைத்துள்ளார்.
இதனைவிட புத்த பெருமானின் தாய் மற்றும் பிள்ளைகளுக்கிடையிலான அன்பை வெளிப்படுத்தும் விடயம் ஒன்றினையும் குறித்த தீர்ப்பில் ஜனக் டி சில்வா சுட்டிக்காட்டியுள்ளார்.
Vidivelli
No comments:
Post a Comment