செம்மணியில் கால்கள் மடிக்கப்பட்டு அமர்ந்த நிலையில் என்புக்கூடு மீட்பு - News View

About Us

About Us

Breaking

Saturday, September 6, 2025

செம்மணியில் கால்கள் மடிக்கப்பட்டு அமர்ந்த நிலையில் என்புக்கூடு மீட்பு

செம்மணி மனிதப் புதைகுழியில் கால்கள் மடிக்கப்பட்டு அமர்த்தி வைக்கப்பட்ட நிலையில் என்புக்கூட்டு தொகுதி ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அதனை அகழும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

செம்மணி மனித புதைகுழியில் அகழ்வு பணிகளின் போது நேற்றுமுன்தினம் (04) குவியலாக 8 மனித என்பு தொகுதிகள் அடையாளம் காணப்பட்ட நிலையில், அவற்றை சுத்தம் செய்து அகழும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

அதன்போது, அவற்றுள் ஒரு மனித என்புக் கூட்டு தொகுதி கால்கள் மடிக்கப்பட்டு இருந்த நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளது.

அது தொடர்பில் தெளிவான விளக்கத்தினை பெற யாழ். பல்கலைக்கழக இந்து நாகரிக துறை சிரேஷ்ட விரிவுரையாளர் புதைகுழி பகுதிக்கு அழைக்கப்பட்டு, அது தொடர்பிலான அவரது அவதானிப்புகள் விளக்கங்கள் கோரப்பட்டன.

அவரது தனது அவதானிப்பின்படி, குறித்த சடலம் இந்து மத முறைப்படி முறையாக அடக்கம் செய்யப்பட்டமைக்கான சான்றுகள் காணப்படவில்லை எனவும், என்பு கூட்டின் கைகள் காணப்படும் நிலைமை உள்ளிட்ட காரணிகளால் அது முறையாக அடக்கம் செய்யப்பட்ட என்பு கூடு இல்லை என தனது அவதானிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

அதனை அடுத்து அது தொடர்பிலான விபரமான அறிக்கையை மன்றில் சமர்ப்பிக்குமாறு நீதவான் செ. லெனின்குமார் உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment