கேபிள் கார் விபத்து உயிரிழப்பு 8 ஆக அதிகரிப்பு : ICU வில் சிகிச்சை பெற்று வந்த மற்றுமொரு பிக்கு மரணம் - News View

About Us

About Us

Breaking

Sunday, September 28, 2025

கேபிள் கார் விபத்து உயிரிழப்பு 8 ஆக அதிகரிப்பு : ICU வில் சிகிச்சை பெற்று வந்த மற்றுமொரு பிக்கு மரணம்

குருணாகல் பன்சியகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மெல்சிறிபுர பகுதியில் உள்ள நா உயன ஆரண்ய சேனாசனத்தில் கேபிள் கார் அறுந்து வீழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் சிகிச்சை பெற்றுவந்த மற்றுமொரு பிக்கு உயிரிழந்துள்ளார்.

அதற்கமைய குறித்த சம்பவத்தில் உயிரிழந்த பிக்குகளின் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த புதன்கிழமை (24) இரவு மதச் சடங்குகளை நிறைவு செய்துவிட்டு குறித்த மடத்திலிருந்து மலை உச்சியிலுள்ள தியான மண்டபத்திற்கு திரும்பிக் கொண்டிருந்தபோது இவ்விபத்து இடம்பெற்றிருந்தது.

இச்சம்பவத்தில், 27 - 47 வயதுடைய, ருமேனியா, ரஷ்யா, இந்தியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த 3 பிக்குகளும் இலங்கையைச் சேர்ந்த 4 பிக்குகளும் மரணமடைந்திருந்தனர்.

மேலும் அதில் பயணித்த இலங்கையைச் சேர்ந்த 6 பிக்குகளும் படுகாயமடைந்து சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் படுகாயமடைந்து குருணாகல் வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் 4 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த 41 வயதான பிக்கு ஒருவர் மரமணமடைந்துள்ளார்.

உயிரிழந்த இலங்கையைச் சேர்ந்த பிக்குகளின் இறுதிக் கிரியையகள் நேற்றையதினம் (27) இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment