கல்குடா ஜம்இய்யதுல் உலமா சபையின் அமைதிப் பேரணி : பிரதேச செயலாளர்களிடம் மகஜர்களும் கையளிப்பு - News View

About Us

About Us

Breaking

Friday, July 11, 2025

கல்குடா ஜம்இய்யதுல் உலமா சபையின் அமைதிப் பேரணி : பிரதேச செயலாளர்களிடம் மகஜர்களும் கையளிப்பு

கல்குடா முஸ்லிம்களின் காணிப் பிரச்சினையை வெளிக்கொணருமுகமாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் கல்குடாக் கிளையினால் ஏற்பாடு செய்த பிரதேசம் தழுவிய அமைதிப் பேரணியும் மகஜர் கையளிக்கும் நிகழ்வும் இன்று வெள்ளிக்கிழமை (11.07.2025) ஜும்ஆத் தொழுகையின் பின்னர் ஓட்டமாவடி மணிக்கூட்டு கோபுர சுற்றுவட்டத்தில் இடம்பெற்றது.

இப்பேரணியில் கல்குடா பிரதேச ஜூம்ஆ பள்ளிவாயல்களிலிருந்து வந்த பொதுமக்கள் கலந்து கொண்டதுடன், பிரதேச சமூக அமைப்புக்கள், மக்கள் பிரதிநிதிகள், பொது நிறுவனங்களின் நிருவாகிகள் எனப்பலர் கலந்து கொண்டனர்.

இதற்கு நீதியைப் பெறும் பொருட்டு கடந்த காலத்தில் ஆணைக்குழு அமைக்கப்பட்டு சிபாரிசுகள் முன்வைக்கப்பட்ட போதிலும் அவற்றை அமுல்படுத்துவதில் தொடர்ந்தும் பல்வேறு நேரடி மற்றும் மறைமுக தடைகள் இருந்து வருகின்றன.

எமது காணி மற்றும் எல்லைப் பிரச்சினைக்கான நியாயமான தீர்வொன்றினைப் பெற்றுக் கொள்வதற்கான சாத்தியமான அரசியல் சூழலொன்று நாட்டில் நிலவுவதாக பல்வேறு தரப்பினரும் கருதுவதால் எமது பிரச்சினையினை சமூக மயப்படுத்தி மாவட்ட மற்றும் மத்திய அரச நிருவாத்திற்கு தெரியப்படுத்தி அழுத்தம் கொடுக்கும் நோக்கில் அமைதிப்பேரணி ஏற்பாடு செய்யப்பட்டது.

அமைதிப்பேரணியில் கலந்து கொண்டோர் எங்களுக்கு அநீதி செய்யாதே இழந்த காணியை மீண்டும் தா என கோசங்கள் எழுப்பி தமது கோரிக்கையை முன்வைத்ததுடன், கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் இருந்து பிரித்து கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் இணைத்த 05 கிராம சேவகர் பிரிவுகளையும் மீண்டும் ஓட்டமாவடி பிரதேச செயலகத்துடன் இணைக்குமாறும் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்திற்கு பன்னம்பலன ஆணைக்குளுவின் சிபாரிசினை நடைமுறைப்படுத்த கோறியும் ஜனாதிபதிக்கு தனித்தனியான மகஜர்கள் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் ஏ.தாஹிர் மற்றும் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் எம்.ஏ.சி.றமீஸா ஆகியோரிடம் கையளிக்கப்பட்டது.

உரிமை தொடர்பாக கோறிக்கை விடுக்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட அமைதிப் பேரணியில் கலந்துகொண்டு ஒத்துழைப்பு வழங்கிய கோறளைப்பற்று, கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபைகளின் உறுப்பினர்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், வர்த்தக சங்கப்பிரதிநிதிகள், பள்ளிவாயல்களில் தர்ம கர்த்தாக்கள் அனைவருக்கும் பாதுகாப்பு வழங்கிய பொலிஸார், இராணுவத்தினருக்கும் ஜம்இய்யதுல் உலமா சபையினால் நன்றி தெரிவிக்கப்பட்டது.

No comments:

Post a Comment