அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதல் கட்டத்திற்குத் தகுதி பெற்ற பயனாளர்களுக்கான ஜூலை மாத உதவித்தொகை நாளை (24) அவர்களது வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.
இதற்கமைய, 14,24,548 குடும்பங்களுக்கு இந்த மாத உதவித் தொகை வழங்க ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், பயனாளர்கள் தங்களுடைய வங்கிக் கணக்குகள் மூலமாக தொகையைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment