எரிபொருள் தட்டுப்பாடு இல்லை - வலுசக்தி அமைச்சு - News View

About Us

About Us

Breaking

Tuesday, June 17, 2025

எரிபொருள் தட்டுப்பாடு இல்லை - வலுசக்தி அமைச்சு

எரிபொருளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக வௌியாகும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என பல்வேறு போலி மற்றும் உண்மைக்கு புறம்பான செய்திகள் சமூக ஊடகங்களில் பரப்பப்படுவதாக அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த 2 மாதங்களுக்கு தேவையான எரிபொருள் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் கையிருப்பிலுள்ளதாக வலுசக்தி அமைச்சு தெரிவித்தது.

இதனிடையே, மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமையை கருத்தில்கொண்டு உலக சந்தையில் எரிபொருள் விலை குறித்த அறிக்கையை வழங்குமாறு வலுசக்தி அமைச்சு இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திடம் கோரியுள்ளது.

No comments:

Post a Comment