நாட்டில் இரண்டு மாதங்களுக்கு தேவையான எரிபொருட்கள் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளன : போலிச் செய்திகளுக்கு பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என்கிறார் அமைச்சரவைப் பேச்சாளர் - News View

About Us

About Us

Breaking

Tuesday, June 17, 2025

நாட்டில் இரண்டு மாதங்களுக்கு தேவையான எரிபொருட்கள் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளன : போலிச் செய்திகளுக்கு பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என்கிறார் அமைச்சரவைப் பேச்சாளர்

எரிபொருள் பற்றாக்குறை குறித்த போலி மற்றும் தவறான செய்திகளால் பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அராசங்க தகவல் திணைக்களத்தில் செவ்வாய்க்கிழமை (17) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், ஈரான் - இஸ்ரேல் மோதலால் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என மக்கள் வீண் அச்சமடையத் தேவையில்லை. 

எதிர்வரும் இரண்டரை மாதங்களுக்கு தேவையான எரிபொருட்கள் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளன. அதற்கமைய 160000 மெட்ரின் தொன் மசகு எண்ணெய் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளது. இம்மாத இறுதியில் மேலும் 90000 மெட்ரிக் தொன் மசகு எண்ணெய் நாட்டை வந்தடையவுள்ளது.

நீண்ட கால ஒப்பந்தத்தின் அடிப்படையில் மேலும் 4 மசகு எண்ணெய் கப்பல்கள் முற்பதிவு செய்யப்பட்டுள்ளன. அத்தோடு 246200 மெட்ரிக் தொன் ஒக்டேன் 92 ரக பெற்றோல், 5000 மெட்ரிக் தொன் ஒக்டேன் 95 ரக பெற்றோல், 193250 மெட்ரிக் தொன் ஒட்டோ டீசல், 10500 மெட்ரிக் தொன் சுப்பர் டீசல் என்பனவும் ஏற்கனவே முற்பதிவு செய்யப்பட்டு, அவை பெற்றுக் கொள்ளப்படுகின்றன.

தற்போது நாட்டில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள எரிபொருள் எதிர்வரும் இரண்டரை மாதங்களுக்கு போதுமானது என்பதோடு, இந்த முற்பதிவுகளும் இனிவரும் நாட்களில் கிடைக்கப் பெறவுள்ளன. எனவே மக்கள் வீண் அச்சம் கொண்டு, வரிசைகளில் நின்று எரிபொருளைப் பெற்று வீடுகளில் தேவைக்கதிகமாக களஞ்சியப்படுத்த வேண்டாம் என மக்களைக் கேட்டுக் கொள்கின்றோம் என்றார்.

No comments:

Post a Comment