வரலாற்றில் முஸ்லிம் காங்கிரஸுக்கு கிடைத்த மகத்தான வெற்றி என்கிறார் கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் - News View

About Us

About Us

Breaking

Monday, June 16, 2025

வரலாற்றில் முஸ்லிம் காங்கிரஸுக்கு கிடைத்த மகத்தான வெற்றி என்கிறார் கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ்

(எஸ். சினீஸ் கான்)

ஓட்டமாவடி பிரதேச சபை முஸ்லிம் காங்கிரஸ் வசமானது வரலாற்றில் முஸ்லிம் காங்கிரஸிற்கு கிடைத்த மகத்தான வெற்றியாகும். இந்த வெற்றியை தாங்கள் சந்தோசமாக ஏற்றுக் கொள்கிறோம். முதல் தடவையாக இம்மண்ணை வெற்றி கொள்ளக் கிடைத்திருக்கிறது என பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கோரளைப்பற்று மேற்கு பிரதேச சபையில் வெற்றி பெற்ற உறுப்பினர்களில் எந்தக் கட்சியும் அறுதிப் பெரும்பாண்மை பெற்றுக் கொள்ளாததால் சபைக்கான தவிசாளர், பிரதித் தவிசாளரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு உள்ளூராட்சி ஆணையாளர் ஏ.எல்.எம். அஸ்மி தலைமையில் இன்று (16) இடம்பெற்றது.

தவிசாளர் தெரிவின்போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முன்மொழிந்த எம்.எச். முஹம்மது பைறூஸ், ஒன்பது வாக்குகளை பெற்று தவிசாளராக தெரிவு செய்யப்பட்டதோடு பிரதித் தவிசாளராக ஏ.எச். நுபைல் தெரிவு செய்யப்பட்டார்.

இச்சபையை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீமுடைய வழிகாட்டலில், பிரதித் தலைவர் கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ்வின் முழுமையான பங்களிப்புடன், கல்குடா தொகுதி அமைப்பாளர் ஹபீப் றிபானின் ஒத்துழைப்புடன் முஸ்லிம் காங்கிரஸ் கைப்பற்றியது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வரலாற்றில் முதல் தடவையாக ஓட்டமாவடி பிரதேச சபையை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில், கடந்த பல காலங்களாக இச்சபையை ஆட்சி செய்தவர்களால் எந்தவொரு சிறந்த அபிவிருத்திப் பணிகளையும் அவர்களால் மேற்கொள்ள முடியவில்லை.

எதிர்காலத்தில் ஓட்டமாவடி பிரதேசத்தில் அதிகளவிலான அபிவிருத்திகளை செய்து, இப்பிரதேச மக்களின் தேவைகளை நிறைவு செய்வதற்கு எங்களது முழுப் பங்களிப்பையும் வழங்குவோம்.

அதேபோல், கல்வி, தொழில்நுட்பம், மீன்பிடி, விவசாயம் போன்ற அனைத்து துறைகளிலும் காணப்படும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கும் முயற்சிகளை மேற்கொள்வோம்.

இப்பிரதேசத்தை கட்டியொழுப்புவதற்கு என்னால் முடிந்த அனைத்துப் பங்களிப்புக்களை வழங்குவேன் என்பதோடு, எங்கள் மீது நம்பிக்கை வைத்து இச்சபையை எங்களிடம் ஒப்படைத்த மக்களுக்கும், பிரதேச சபை உறுப்பினர்களுக்கும், தமக்கு ஆதரவாக செயற்பட்ட ஏனைய கட்சி உறுப்பினர்களும் தனது நன்றிகளை எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

No comments:

Post a Comment