முதியோர்களுக்கு எதிரான துஷ்பிரயோகங்களை முறையிட வட்ஸ்அப் இலக்கம் - News View

About Us

About Us

Breaking

Monday, June 16, 2025

முதியோர்களுக்கு எதிரான துஷ்பிரயோகங்களை முறையிட வட்ஸ்அப் இலக்கம்

முதியோர்களுக்கு எதிராக இடம்பெறும் துஷ்பிரயோக சம்பவங்கள் தொடர்பில் முறையிடுவதற்கு சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சினால் வட்ஸ்அப் இலக்கம் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

எனவே முதியோர்களுக்கு எதிராக இடம்பெறும் துஷ்பிரயோக சம்பவங்கள் தொடர்பில் முறையிட தேசிய முதியோர் செயலகத்தின் 0707 89 88 89 என்ற வட்ஸ்அப் இலக்கத்தை பயன்படுத்த முடியும்.

இந்த வட்ஸ்அப் இலக்கமானது 24 மணி நேரமும் சேவையில் இருக்கும் என சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சு தெரிவித்துள்ளது.

ஜூன் மாதம் 15 ஆம் திகதி அனுசரிக்கப்படும் உலக முதியோர் துஷ்பிரயோக விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு இந்த சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment