புதிய பொலிஸ் ஊடகப் பேச்சாளராக உதவி பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி எஃப்.யூ. வுட்லர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கு முன்னதாக அவர் பொலிஸ் ஊடகப் பிரிவின் உதவிப் பணிப்பாளராகப் பணியாற்றியிருந்தார்.
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதி மற்றும் முடிவின்படி, பொதுச் சேவை ஆணைக்கழு நடைமுறை விதிகள் 258 II இன் கீழ், எஃப்.யு. வுட்லரை, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மற்றும் பொலிஸ் ஊடகப் பிரிவின் பணிப்பாளரரின் கடமைகளை மேற்கொள்ள, பதில் பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய நியமித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை, கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 16 ஆம் திகதி முதல் பொலிஸ் ஊடகப் பேச்சாளராகவும், பொலிஸ் ஊடகப் பிரிவின் பணிப்பாளராகவும் தனது கடமைகளைச் செய்து வந்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி புத்திக மனதுங்க, பொலன்னறுவை பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
No comments:
Post a Comment