“அணையா விளக்கு” போராட்ட களத்திலிருந்து வெளியேற்றப்பட்ட சிவஞானம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, June 25, 2025

“அணையா விளக்கு” போராட்ட களத்திலிருந்து வெளியேற்றப்பட்ட சிவஞானம்

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் நடைபெற்றுவரும் அணையா விளக்கு போராட்டத்தில் கலந்துகொள்ள சென்ற வட மாகாண சபை அவைத் தலைவரும், தமிழரசு கட்சியின் பதில் தலைவருமான சீ.வி.கே சிவஞானம் போராட்ட களத்தில் நின்ற மக்களால் அவ்விடத்தில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளார்.

செம்மணியில் நடைபெற்றுவரும் அணையா விளக்கு போராட்டம் இன்று (25) 3ஆவது நாளாக தொடர் போராட்டமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

அந்நிலையில் மதியம் போராட்டத்தில் கலந்துகொள்ள சென்ற சீ.வி.கே சிவஞானத்தை அங்கிருந்த மக்கள் வெளியேறுமாறு கோஷங்களை எழுப்பி போராட்ட களத்தில் இருந்து வெளியேற்றி இருந்தனர்.

யாழ்ப்பாணத்தில் பலர் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என பகிரங்கமாக குற்றச்சாட்டப்பட்டு வரும் ஈழமக்கள் ஜனநாயக கட்சியினருடன் கூட்டு சேர்ந்து யாழ்ப்பாணத்தில் உள்ளூராட்சி சபைகளில் தமிழரசு கட்சி ஆட்சி அமைந்துள்ளதாகவும், அவ்வாறானவர்களுடன் கூட்டு சேர்ந்தவர்கள் இந்த போராட்டத்தில் கலந்துகொள்ள தகுதியற்றவர்கள் என கூறியே போராட்ட களத்தில் இருந்து சீ.வி.கே சிவஞானத்தை அப்புறப்படுத்தியதாக அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment