தாய்லாந்து நாட்டில் புக்கெட் மாகாணத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் இருந்து டெல்லிக்கு ஏர் இந்தியா விமானம் AI379 இன்று (13) காலை 9.30 மணிக்கு புறப்பட்டது. இந்த விமானத்தில் 156 பயணிகள் இருந்தனர்.
விமான நிலைய ஒடுபாதையில் இருந்து வானில் பறக்கத் தொடங்கிய 20 நிமிடங்களிலேயே, அந்த விமானம் அவசர அவசரமாக மீண்டும் புக்கெட் மாகாண விமான நிலையத்தில் தரை இறக்கப்பட்டது. இதனால், அந்த விமானத்தில் பயணித்த 156 பயணிகளும் அச்சமடைந்தனர்.
முன்னதாக, இந்த விமானம் வழக்கமான பரிசோதனைகளுக்கு பிறகு பயணிகளுடன் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டது. ஆனால், வானில் பறந்த சிறிது நேரத்திலேயே, விமான நிலையத்தின் கட்டுப்பாட்டு அறையில் இருந்து விமானிக்கு ஒரு அவசர தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
அதில், விமானத்தை உடனடியாக புக்கெட் மாகாணத்தின் சர்வதேச விமான நிலையத்தில் தரை இறக்குமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, அந்த விமானத்தின் விமானிகள் அந்த விமானத்தை அவசர அவசரமாக புக்கெட் மாகாண விமான நிலையத்தில் தரை இறக்கினர். இதனால், அந்த விமானத்தில் பயணித்த 156 விமான பயணிகள் அச்சமடைந்தனர். மேலும், விமான நிலையத்திலும் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து விசாரணையில் அந்த ஏர் இந்தியா விமானத்துக்கு வெடி குண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது தெரியவந்தது. இதனால், அந்த விமானம் புறப்பட்டு பறக்கத் தொடங்கிய சிறிது நேரத்திலேயே மீண்டும் தரை இறக்கப்பட்டுள்ளது.
விமானம் தரை இறங்கியதும் அதில், இருந்த பயணிகள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர். மேலும், அவர்களது உடைமைகள் வெளியேற்றப்பட்டு விமானம் முழுவதும் சிஐஎஸ்ஃப் வீரர்கள், வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள், மோப்ப நாய்கள் உதவியுடன் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்தத் சோதனையில் விமானத்தில் வெடி குண்டுகள் ஏதும் கண்டறியப்படவில்லை. மேலும், விமான நிலையம் முழுவதும் வெடி குண்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும், விமான நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment