தேசிய மக்கள் சக்தி வசமானது கொழும்பு மாநகர சபை : மேயராக விராய் கெலி பல்தசார் தெரிவானார் - News View

About Us

About Us

Breaking

Sunday, June 15, 2025

தேசிய மக்கள் சக்தி வசமானது கொழும்பு மாநகர சபை : மேயராக விராய் கெலி பல்தசார் தெரிவானார்

கொழும்பு மாநகர சபையின் மேயர் தெரிவுக்காக இடம்பெற்ற இரகசிய வாக்கெடுப்பில் தேசிய மக்கள் சார்பில் போட்டியிட்ட மேயர் வேட்பாளர் விராய் கெலி பல்தசார் வெற்றி பெற்றுள்ளார்.

கொழும்பு மாநகர சபை மேயருக்காக தேசிய மக்கள் சக்தி சார்பில் விராய் கெலி பல்தசாரும், ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் ரீஸா சரூக் போட்டியிட்டனர்.

இந்நிலையில், 117 உறுப்பினர்களைக் கொண்ட கொழும்பு மாநகர சபையில் 61 வாக்குகளை விராய் கெலி பல்தசார் பெற்றுக் கொண்டதோடு, ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட ரிஸா சரூக் 54 வாக்குகளைப் பெற்றுக்கொண்டார்.

கொழும்பு மாநகர சபையின் பிரதி மேயராக ஹேமந்த குமார தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத கொழும்பு மாநகர சபையின் கன்னிக் கூட்டம் உள்ளூராட்சி ஆணையாளர் சாரங்கிகா ஜயசுந்தர தலைமையில் இன்று (16) நடைபெற்றது.

அதற்கமைய, நீண்ட நேர விவாதத்திற்கு பின்னர் இரகசிய வாக்கெடுப்பு மூலம் கொழும்பு மாநகர சபையின் மேயரை தெரிவு செய்வதாக சபையில் ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment