அகமதாபாத்தில் இருந்து 241 பயணிகளுடன் இலண்டன் புறப்பட இருந்த ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு கடைசி நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து விமானம் இரத்து செய்யப்படுவதாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்தது.
குஜராத்தின் ஆமதாபாத்தில் ஏர் இந்தியாவுக்கு சொந்தமான விமானம், கடந்த 12ஆம் திகதி விபத்துக்குள்ளானது. இதில், பயணித்தவர்கள் உட்பட மொத்தம் 270 பேர் பலியாகினர்.
நேற்று லண்டனில் இருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்த விமானத்தில் நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதனால் விமானம் மீண்டும் லண்டனுக்கே திரும்பி அனுப்பப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று (17) ஏர் இந்தியாவின் விமானம் (எண் AI 159) ஆமதாபத்தில் இருந்து 241 பயணிகளுடன் இலண்டன் புறப்பட இருந்தது.
ஆனால் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து விமானம் இரத்து செய்யப்படுவதாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்தது.
கடந்த வாரம் நடந்த விமான விபத்துக்கு பிறகு, இலண்டன் செல்லும் முதல் விமானம் இரத்து செய்யப்பட்டுள்ளது பயணிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
விமானம் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு மதியம் 1:10 மணிக்கு புறப்பட திட்டமிடப்பட்டிருந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இறுதி நேரத்தில் விமானம் ரத்து செய்யப்பட்டதால் முன்பதிவு செய்திருந்த 200 பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment