உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் : ஒப்புதல் வாக்குமூலத்துக்கு எதிரான மேன் முறையீட்டால் வழக்கு ஒத்தி வைப்பு - News View

About Us

About Us

Breaking

Thursday, May 15, 2025

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் : ஒப்புதல் வாக்குமூலத்துக்கு எதிரான மேன் முறையீட்டால் வழக்கு ஒத்தி வைப்பு

உயிர்த்த ஞாயிறு தினத்­தன்று இடம்­பெற்ற குண்டுத் தாக்­கு­தல்கள் தொடர்பில் 24 பேருக்கு எதி­ராக சட்டமா அதிபர் திணைக்­களம் தாக்கல் செய்­துள்ள வழக்கு விசா­ர­ணைகள் எதிர்­வரும் ஜூன் 12 ஆம் திக­தி­ வரை ஒத்தி வைக்­கப்­பட்­டுள்­ளது.

11 ஆவது பிர­தி­வா­தியின் ஒப்­புதல் வாக்­கு­மூ­லத்தை ஏற்­றுக்­ கொள்ள மூவ­ர­டங்­கிய நீதி­ப­திகள் அமர்வு எடுத்த முடிவை சவா­லுக்கு உட்படுத்தி உயர் நீதி­மன்றில் மேன் முறை­யீடு செய்­யப்­பட்­டுள்ள பின்­ன­ணியில் இவ்­வாறு இந்த வழக்கு ஒத்தி வைக்­கப்­பட்­டது.

கொழும்பு மேல் நீதி­மன்ற நீதி­பதி நவ­ரத்ன மார­சிங்க தலைமையிலான மூவ­ர­டங்­கிய நீதி­ப­திகள் அமர்வு முன்­னி­லையில் இந்த வழக்கு நேற்று (14) மீளவும் விசா­ர­ணைக்கு வந்­தது. 

இதன்­போது பிர­தி­வா­திகள் 24 பேரும் மன்றில் ஆஜ­ரா­கி­யி­ருந்த நிலையில், அவர்­க­ளுக்­காக சிரேஷ்ட சட்­டத்­த­ர­ணி­க­ளான ரத்­னவேல், கஸ்­ஸாலி ஹுசைன், ருஷ்தி ஹபீப், வஸீமுல் அக்ரம், ரிஸ்வான் உவைஸ் உள்­ளிட்ட சட்­டத்­த­ர­ணிகள் ஆஜ­ரா­கினர்.

வழக்குத் தொடுநர் சட்டமா அதி­ப­ருக்­காக சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரால் சுதர்­ஷன சில்வா, சிரேஷ்ட அரச சட்­ட­வாதி சஜித் பண்­டார உள்­ளிட்ட குழு­வினர் ஆஜ­ரா­கினர்.

இதன்­போது மன்றில் அரசின் சிரேஷ்ட பிரதி சொலி­சிட்டர் ஜெனரால் சுதர்­ஷன டி சில்­வாவும், 11 ஆவது பிர­தி­வா­தியின் சட்­டத்­த­ரணி ருஷ்தி ஹபீபும் விட­யங்­களை முன் வைத்­தனர்.

11 ஆவது பிர­தி­வாதி தாக்கல் செய்­துள்ள மேன் முறை­யீட்­டுக்கு உயர் நீதி­மன்றம் இலக்கம் ஒன்­றினை அளித்­துள்­ள­தாக குறிப்­பிட்ட சிரேஷ்ட பிரதி சொலி­சிட்டர் ஜெனரால் சுதர்­ஷன டி சில்வா, எஸ்.சி.டி.ஏ.பி. 01/2025 என்­பதே அவ்­வி­லக்கம் என குறிப்­பிட்டார். 

அவ்­வ­ழக்கின் கோவை பிர­தம நீதி­ய­ர­சரின் பொறுப்பில் இருப்பதாகவும், அம்­மேன்­மு­றை­யீட்டை விசா­ரிக்க இன்னும் ஐந்து பேர் கொண்ட நீதி­ய­ர­சர்கள் குழாம் நிய­மிக்­கப்­ப­ட­வில்லை எனவும் அவர் சுட்­டிக்­காட்­டினார்.

இதன்­போது சட்டமா அதி­பரும், 11 ஆவது பிர­தி­வா­தியின் சட்டத்தணியும் இணைந்து, இணைந்த நகர்த்தல் பத்­திரம் ஒன்­றினை உயர் நீதி­மன்­றுக்கு சமர்ப்­பித்து மேன் முறை­யீட்டு மனுவை விசாரணைக்கு அழைத்து, மேல் நீதி­மன்ற வழக்கை முன் கொண்டு செல்ல தேவை­யான நட­வ­டிக்­கை­களை எடுப்­ப­தாக மன்­றுக்கு தெரிவித்­தனர்.

இத­னை­ய­டுத்தே விட­யங்­களை ஆராய்ந்த மூவர் கொண்ட நீதியரசர்கள் குழாம், வழக்கை எதிர்­வரும் ஜூன் 12 ஆம் திகதி விசாரணைக்கு அழைக்க தீர்­மா­னித்­தனர்.

வழக்குத் தொட­ரப்­பட்­டுள்ள பிர­தி­வா­திகள்
01. அபூ செய்த் எனப்­படும் மொஹம்மட் இப்­ராஹீம் மொஹம்மட் நெளபர் அல்­லது நெளபர் மெள­லவி

02. அபூ ஹதீக் எனப்­படும் கபூர் மாமா அல்­லது கபூர் நாநா எனும் பெயரால் அறி­யப்­படும் மொஹம்மட் சரீப் ஆதம் லெப்பை

03. அபூ சிலா எனப்­படும் ஹயாத்து மொஹம்­மது மில்ஹான்

04. அபூ உமர் எனப்­படும் மொஹம்மட் இப்­ராஹீம் சாதிக் அப்­துல்லாஹ்

05. அபூ பலா எனப்­படும் மொஹம்மட் இப்­ராஹீம் சாஹித் அப்துல் ஹக்

06. அபூ தாரிக் எனப்­படும் மொஹம்மட் அன்வர் மொஹம்மட் ரிஸ்கான்

07. அபூ மிசான் எனப்­படும் மொஹம்மட் மன்சூர் மொஹம்மட் சனஸ்தீன்

08. அப்துல் மனாப் மொஹம்மட் பிர்­தெளஸ்

09. அபூ நஜா எனப்­படும் மொஹம்மட் ரமீஸ் மொஹம்மட் சாஜித் அல்லது சாஜித் மெள­லவி

10. ஷாபி மெள­லவி அல்­லது அபூ புர்கான் எனப்­படும் அப்துல் லதீப் மொஹம்மட் ஷாபி

11. ஹுசைனுல் ரிஸ்வி ஆதில் சமீர்

12.அபூ தவூத் எனப்­படும் மொஹம்மட் சவாஹிர் மொஹம்மட் ஹசன்

13. அபூ மொஹம்மட் எனப்­படும் மொஹம்மட் இப்­திகார் மொஹம்மட் இன்சாப்

14. ரஷீத் மொஹம்மட் இப்­றாஹீம்

15. அபூ ஹினா எனப்­படும் மொஹம்மட் ஹனீபா செய்னுள் ஆப்தீன்

16. அபூ நன் ஜியார் எனப்­படும் மொஹம்மட் முஸ்­தபா மொஹம்மட் ஹாரிஸ்

17. யாசின் பாவா அப்துல் ரவூப் (சிறையில் மர­ண­ம­டைந்து விட்டார்)

18. ராசிக் ராசா ஹுசைன்

19. கச்சி மொஹம்மது ஜெஸ்மின்

20. செய்னுல் ஆப்தீன் மொஹம்மட் ஜெஸீன்

21. மொஹம்மட் முஸ்தபா மொஹம்மட் ரிஸ்வான்

22.அபூ சனா எனப்படும் மீரா சஹீட் மொஹம்மட் நப்லி

23. மொஹம்மட் அமீன் ஆயதுல்லாஹ்

24. மொஹம்மட் அன்சார்தீன் ஹில்மி

25. மொஹம்மட் அக்ரம் அஹக்கம்

-Vidivelli

No comments:

Post a Comment