பயங்கரவாத தடைச் சட்டத்தை முழுமையாக இரத்து செய்க : முஸ்லிம் புத்திஜீவிகள், சிவில் அமைப்புகள் கூட்டாக பரிந்துரை - News View

About Us

About Us

Breaking

Thursday, May 29, 2025

பயங்கரவாத தடைச் சட்டத்தை முழுமையாக இரத்து செய்க : முஸ்லிம் புத்திஜீவிகள், சிவில் அமைப்புகள் கூட்டாக பரிந்துரை

பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தை முழு­மை­யாக நீக்க வேண்டும் என வலி­யு­றுத்தி முஸ்லிம் புத்­தி­ஜீ­விகள் மற்றும் சிவில் சமூக உறுப்பினர்கள் இணைந்து பயங்­க­ர­வாத எதிர்ப்பு சீர்திருத்தங்களுக்கான பரிந்­து­ரை­களை சமர்ப்­பித்­துள்­ளனர்.

புத்­தி­ஜீ­விகள், கல்­வி­யா­ளர்கள் மற்றும் சிவில் சமூகத் தலை­வர்­கள் அடங்கிய குழு, நீதி மற்றும் தேசிய ஒரு­மைப்­பாட்டு அமைச்­சுக்கு விரி­வான பரிந்­து­ரை­களை கூட்­டாக சமர்ப்­பித்­துள்­ளது.

பயங்­க­ர­வாதத் தடைச் சட்­டத்தை (PTA) முழு­மை­யாக இரத்துச் செய்யுமாறும், மனித உரி­மைகள், அர­சி­ய­ல­மைப்பு பாது­காப்பு மற்றும் ஜன­நா­யகப் பொறுப்­புக்­கூறல் ஆகி­ய­வற்றின் அடிப்படையில் ஒரு புதிய பயங்­க­ர­வாத எதிர்ப்பு சட்­டத்தை உருவாக்கு­மாறும் அவர்கள் வலி­யு­றுத்­தி­யுள்­ளனர்.

“பயங்­க­ர­வாதத் தடை (தற்­கா­லிக ஏற்­பா­டுகள்) சட்டம் இல. 48, 1979 ஐ மாற்­று­வ­தற்­கான புதிய பயங்­க­ர­வாத எதிர்ப்பு மசோ­தாவை உருவாக்­கு­வது தொடர்­பான பரிந்­து­ரைகள்” என்ற தலைப்பில் சமர்ப்பிக்­கப்­பட்ட இந்த ஆவணம், தேசிய பாது­காப்பைப் பாதுகாக்கும் அதே வேளையில், அனைத்து குடி­மக்­க­ளுக்கும், குறிப்பாக ஒடுக்­கப்­பட்ட சமூ­கங்­க­ளுக்கும் நீதி மற்றும் சமத்­து­வத்தை உறுதி செய்யும் ஒரு மாற்­றி­ய­மைக்­கப்­பட்ட சட்டக் கட்­ட­மைப்பை முன்­மொ­ழி­கி­றது.

இந்த பரிந்­து­ரை­களை பேரா­சி­ரியர் (டாக்டர்) எம்.எஸ்.எம். ஷிஃபா (BUMS, MD, PhD, LLB, சட்­டத்­த­ரணி), SEDA, ரி.கே. ஆசூர், சட்­டத்­த­ரணி, ஏ.ஜே., முஹம்­மது அர்ஷத், LLB, ரிஸ்வான் உவைஸ், சட்­டத்­த­ரணி, நிஸ்வார்தீன் பாத்­திமா நிஷ்ரா, சட்­டத்­த­ரணி, மற்றும் அப்துல் அஸீஸ் மொஹமட் அனாஸ் (ACA, MFE, LLB UK, FMAAT, ACPM, MCIM, MSLEA) ஆகியோர் கூட்­டாக சமர்ப்­பித்­துள்­ளனர்.

குறித்த முன்­மொ­ழி­வு­களில்,
PTA இன் வர­லாற்றுத் தவ­றான பயன்­பாடு, மனித உரிமை மீறல்கள் மற்றும் பயங்­க­ர­வா­தத்தைக் கட்­டுப்­ப­டுத்தத் தவ­றி­யது கார­ண­மாக அதனை உட­ன­டி­யாக ரத்து செய்தல்.

அமை­தி­யான கருத்து வேறு­பா­டுகள், பத்­தி­ரிகை, மத நடவடிக்கைகள் மற்றும் கலந்­து­ரை­யா­டல்கள் ஆகி­ய­வற்றைத் தவிர்த்து, பயங்­க­ர­வா­தத்தின் ஒரு குறு­கிய மற்றும் துல்­லி­ய­மான வரை­யறை.

கைதுகள் மற்றும் தடுப்­புக்­கா­வல்கள் மீது நீதித்­துறை மேற்­பார்வை, அத்­துடன் குற்­றஞ்­சாட்­டப்­ப­டு­வ­தற்கு முன் அதி­க­பட்­ச­மாக 48 மணிநேர தடுப்­புக்­காவல் காலம்.

சித்­தி­ர­வ­தைக்கு தடை, மற்றும் மருத்­துவ பரி­சோ­த­னைகள் மற்றும் தடுப்­புக்­கா­வலில் CCTV கண்­கா­ணிப்பு உட்­பட கட்­டா­யப்­ப­டுத்­தப்­பட்ட வாக்­கு­மூ­லங்­களைத் தடுப்­ப­தற்­கான நட­வ­டிக்­கைகள்.

ஓய்­வு ­பெற்ற நீதி­ப­திகள், சிவில் சமூகப் பிர­தி­நி­திகள் மற்றும் சட்ட வல்­லு­நர்­களைக் கொண்ட ஒரு சுயா­தீ­ன­மான மேற்­பார்வைக் குழு.

அர­சி­யல்­ம­ய­மாக்­கப்­பட்ட de-radicalization திட்­டங்­களை விலக்­குதல் மற்றும் கலாசார மற்றும் மத வெளிப்­பா­டு­களைப் பாது­காத்தல்.

சட்­டத்­திற்கு ஒரு காலக்­கெடு மற்றும் கட்­டாய வரு­டாந்­திர நாடாளுமன்ற ஆய்வு.

இன்னும் இது­போன்ற பல்­வேறு சட்­டத்தின் நுணுக்­க­மான மதிப்பாய்வுடன் கூடிய முன்­மொ­ழி­வுகள் உள்­ளிட்ட விட­யங்­களும் உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ளன.

அத்­துடன், வரைவுச் செயல்­பாட்டில் வெளிப்­ப­டைத்­தன்மை மற்றும் பொது ஈடு­பாட்­டிற்கு இந்தக் குழு அழைப்பு விடுக்­கி­றது. மேலும், முன்மொ­ழி­யப்­பட்ட சட்­டத்தை நாடா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிப்­ப­தற்கு குறைந்­தது மூன்று மாதங்­க­ளுக்கு முன்­ன­தாக ஒரு வெள்ளை அறிக்கை­யாக வெளி­யிட வேண்டும் என்று அர­சாங்­கத்தை வலியுறுத்­து­கி­றது.

“இது ஒரு சட்­டத்தை சீர்­தி­ருத்­து­வது மட்­டு­மல்ல. இது நமது ஜனநாயகத்தின் ஆன்­மா­வையும் ஒவ்­வொரு குடி­ம­கனின் கண்ணியத்­தையும் பாது­காப்­ப­தாகும்” என்று அங்­கீ­க­ரித்­த­வர்கள் சார்­பாகப் பேசிய பேராசிரியர் ஷிஃபா கூறினார். “ஒரு மனிதாபிமான மற்றும் பயனுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் உரிமைகளில் வேரூன்றியிருக்க வேண்டும், அடக்குமுறையில் அல்ல”.

இந்தச் சமர்ப்பிப்பு, தேசிய பாதுகாப்பிற்கான ஒரு சமநிலையான, சட்டபூர்வமான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய அணுகுமுறையுடன் இலங்கை முன்னோக்கிச் செல்வதை உறுதி செய்வதற்கான ஒரு முனைப்பான மற்றும் கொள்கை ரீதியான பதிலைக் குறிக்கிறது.

Vidivelli

No comments:

Post a Comment