முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்கவிற்கு விளக்கமறியல் நீடிப்பு - News View

About Us

Add+Banner

Breaking

  

Thursday, May 29, 2025

demo-image

முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்கவிற்கு விளக்கமறியல் நீடிப்பு

duminda-dissanayaka-21
முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்கவிற்கு எதிர்வரும் ஜூன் 05 ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

வெள்ளவத்தை பகுதியிலுள்ள சொகுசு அடுக்குமாடி குடியிருப்பில் தங்க முலாம் பூசப்பட்ட T56 வகை துப்பாக்கியொன்று மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கடந்த வெள்ளிக்கிழமை (24) துமிந்த திசாநாயக்க கைது செய்யப்பட்டார்.

இந்த தங்க முலாம் பூசப்பட்ட T-56 துப்பாக்கி கடந்த செவ்வாய்க்கிழமை (20) கண்டுபிடிக்கப்பட்டதோடு, சம்பவம் தொடர்பில் 2 பெண்களும் ஒரு ஆணும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணைகளின் போது தெரியவந்த தகவல்களின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க கைது செய்யப்பட்டார்.

அதன் பின்னர், கல்கிஸ்ஸை பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், இன்று (29) வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

பின்னர் அவரது உடல்நிலை மோசமடைந்ததால் சிறைச்சாலை மருத்துவமனைக்கு அனுப்புமாறு பரிந்துரைக்கப்பட்டார். பின்னர் ஒரு விசேட மருத்துவரால் பரிசோதிக்கப்பட்ட பின்னர் அவர் மீண்டும் மகசின் சிறைச்சாலைக்கு திருப்பி அனுப்பப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டிருந்தார்.இவரை எதிர்வரும் 29 ஆம் திகதி வரை பாதுகாப்புக் காவலில் வைக்குமாறு கல்கிசை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

முன்னாள் அமைச்சரை கொழும்பு நீதித்துறை மருத்துவ அதிகாரியிடம் அனுப்பவும், பெறப்பட்ட மருத்துவ அறிக்கைகளின் அடிப்படையில், அவரின் உடல்நிலை சரியில்லாதிருந்ததால், அவரை சிறைச்சாலை மருத்துவமனைக்கு அனுப்பவும் நீதவான் உத்தரவிட்டிருந்தார்.

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *