2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இன்று (26) வெளியிடப்பட்டுள்ளன.
பரீட்சைகள் திணைக்களம் இந்த பெறுபேறுகளை வெளியிட்டதுடன் www.doenets.lk அல்லது www.results.exams.gov.lk என்ற இணைய தளங்களில் பிரவேசித்து பெறுபேறுகளை மாணவர்கள் பார்வையிடலாம் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.
2024 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 25 ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரை நாடு முழுவதும் 2312 பரீட்சை நிலையங்களில் நடைபெற்றது.
இந்த பரீட்சையில் மொத்தமாக 274,361 பரீட்சாத்திகள் தோற்றியதுடன், அதில் 222,774 பேர் பாடசாலை பரீட்சாத்திகளாவர்.
அதன்படி, 177,588 பேர் பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
இதில் 149,964 பாடசாலை விண்ணப்பதாரர்களும், 27,624 தனியார் விண்ணப்பதாரர்களும் உள்ளடங்குகின்றனர்.
அதேவேளை 456 பரீட்சாத்திகளின் பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
அத்துடன், பரீட்சையின் பெறுபேறுகளை மீள் திருத்துவதற்கான விண்ணப்பங்களை மே மாதம் 2ஆம் திகதி முதல் 16 ஆம் திகதி வரை விண்ணப்பிக்க முடியும் என்றும் பரீட்சைகள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment