டிப்பர் சில்லுக்குள் சிக்கி பலியான 1½ வயது குழந்தை : தந்தை செலுத்திய டிப்பர் எமனானது - News View

About Us

About Us

Breaking

Friday, April 18, 2025

டிப்பர் சில்லுக்குள் சிக்கி பலியான 1½ வயது குழந்தை : தந்தை செலுத்திய டிப்பர் எமனானது

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பாள்குளம் பகுதியில் ஒன்றரை வயதுடைய பெண் குழந்தை ஒன்று டிப்பர் வாகன சில்லுக்குள் நசியுண்டு உயிரிழந்துள்ளது. இச்சம்பவம் இன்று (18) பிற்பகல் 5.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

தனது வீட்டில் இருந்த டிப்பர் வாகனத்தை தந்தை செலுத்தியபோது அதன் சில்லுக்குள் சிக்குண்டு குழந்தை பலியாகியுள்ளது.

சம்பவ இடத்தை சென்று பார்வையிட்ட கிளிநொச்சி மாவட்ட பதில் நீதவான் எஸ். சிவபாலசுப்ரமணியம் உடற்கூற்று விசாரணைகளின் பின்னர் சடலத்தை உறவினர்களிடம் கையளிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலதிக கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

No comments:

Post a Comment