தபால்மூல வாக்களிப்பிற்கான திகதிகள் அறிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Thursday, March 27, 2025

தபால்மூல வாக்களிப்பிற்கான திகதிகள் அறிவிப்பு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு ஏப்ரல் மாதம் 22, 23 மற்றும் 24 ஆகிய திகதிகளில் நடைபெறும் என்று தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதற்கான தபால்மூல வாக்குச்சீட்டுகள் ஏப்ரல் மாதம் 7ஆம் திகதி விநியோகிக்கப்படும் என தேசிய தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அன்றைய தினம் தபால் மூலம் வாக்களிக்க முடியாத அரச ஊழியர்களுக்கு ஏப்ரல் 28 மற்றும் 29 ஆகிய திகதிகளில் தபால் மூலம் வாக்களிக்க வாய்ப்பு வழங்கப்படும் என அந்த ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment