ஜனாதிபதி தொடர்பில் பரவி வரும் உண்மைக்கு புறம்பான செய்தி : சமூக வலைத்தள செய்திகளை மறுத்த பாதுகாப்பு அமைச்சு - News View

About Us

About Us

Breaking

Sunday, February 2, 2025

ஜனாதிபதி தொடர்பில் பரவி வரும் உண்மைக்கு புறம்பான செய்தி : சமூக வலைத்தள செய்திகளை மறுத்த பாதுகாப்பு அமைச்சு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் யாழ்ப்பாண விஜயத்திற்கு ஸ்ரீ லங்கா விமானப் படையின் 03 விமானங்கள் பயன்படுத்தப்பட்டதாக வெளியான தகவல்கள் தவறானவையென பாதுகாப்பு அமைச்சு இன்று (02) தெரிவித்துள்ளது.

இணையதளங்களில் பரவிய தகவலின் பின்னணியில், 2025 ஜனவரி 31ஆம் திகதி இடம்பெற்ற விஜயத்தின்போது ஸ்ரீ லங்கா விமானப் படையின் 03 விமானங்கள் பயன்படுத்தப்பட்டதாக கூறப்பட்டது. 

எனினும், பாதுகாப்பு அமைச்சு அதன் அறிக்கையில், இதுவரை எந்தப் பயணத்திலும் ஸ்ரீ லங்கா விமானப் படைக்கு சொந்தமான விமானங்கள் பயன்படுத்தப்படவில்லை எனத் தெளிவுபடுத்தியுள்ளது.

பாதுகாப்பு அமைச்சின் விளக்கத்தை தொடர்ந்து, மேற்படி தவறான தகவல்களின் பரவலை தடுக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் இதுபோன்ற தவறான தகவல்கள் குறித்து மேலும் தெளிவாக்கம் செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment