கொழும்பு - கோட்டையில் உள்ள 60 மாடி கிரிஷ் கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்று 06ஆம் திகதி வியாழக்கிழமை மாலை கட்டடத்தின் மேல் தளத்தில் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
கட்டடத்தின் 35ஆவது மாடியில் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
தீ கட்டடத்தின் 6 தளங்களுக்கு பரவியுள்ளதாகவும், தீயைக் கட்டுப்படுத்த தீயணைப்பு பிரிவினர் கடுமையாகப் போராடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும், தற்போது 3 தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீயை அணைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment