பேச்சுவார்த்தைக்கு வராவிட்டால் ரஷ்யா மீது பொருளாதார தடை : அமெரிக்க ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Wednesday, January 22, 2025

பேச்சுவார்த்தைக்கு வராவிட்டால் ரஷ்யா மீது பொருளாதார தடை : அமெரிக்க ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு

இரண்டாவது முறையாக அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள டொனால்ட் ட்ரம்ப், ரஷ்ய ஜனாதிபதியைச் சந்திக்கத் தயார் எனத் தெரிவித்துள்ளார். 

அதேநேரத்தில் விளாதிமிர் புடின் பேச்சுவார்த்தைக்கு வராவிட்டால் ரஷ்யா மீது கூடுதல் பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என மிரட்டல் விடுத்துள்ளார்.

“நம்மிடம் திறன்மிக்க ஜனாதிபதி ஆட்சியில் இருந்திருந்தால் இந்தப் போர் ஆரம்பித்திருக்காது. நான் ஜனாதிபதியாக இருந்திருந்தால் உக்ரைனில் போர் என்ற பேச்சுக்கே இடமில்லை. ரஷ்யா ஒருபோதும் உக்ரைனுக்கு படையெடுத்துச் சென்றிருக்காது. விளாதிமிர் புடின் உடன் எனக்கு வலுவான புரிதல் உள்ளது. அதனால் அங்கு போர் என்பது ஏற்பட்டிருக்காது.

ஆனால், அவர் ஜோ பைடனை மதிக்கவில்லை. அதேபோல மத்திய கிழக்கிலும் இந்தச் சூழல் ஏற்பட்டிருக்காது.

என்னை எப்போது சந்திக்க வேண்டுமென விளாதிமிர் புடின் கருதுகிறாரோ அப்போது அவரை சந்திக்க நான் தயார். லட்சக் கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். நகரங்கள் சிதிலமடைந்து காணப்படுகிறது. இது ஒரு மோசமான சூழ்நிலை. 

நமக்கு களத்தில் இருந்து கிடைக்கும் செய்திகளை காட்டிலும் உக்ரைனில் கூடுதலான மக்கள் உயிரிழந்துள்ளனர் என்பதே நிஜம். அதற்காக பத்திரிகையாளர்கள் மீது நான் குற்றச்சாட்டு வைக்கவில்லை. அசல் உயிரிழப்பு விவரம் தெரியக்கூடாது என அரசு எண்ணி இருக்கலாம்.

நமது தரப்பில் உக்ரைனுக்கு ஆயுத உதவி வழங்குவது தொடர்பாக விரைவில் ஒரு முடிவு எடுக்கப்படும். உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியுடன் பேசி வருகிறேன். அவர் அமைதியை விரும்புகிறார். இருந்தாலும் இந்த சிக்கலுக்கு தீர்வு காண இரண்டு பக்கமும் பேச வேண்டியுள்ளது. 

விரைவில் விளாதிமிர் புதின் உடன் பேச்சுவார்த்தை மேற்கொள்ள உள்ளோம். அவர் பேச்சுவார்த்தைக்கு வரவில்லை என்றால் ரஷ்யா மீது கூடுதல் பொருளாதாரத் தடை விதிக்கப்பட வாய்ப்பு உள்ளது” என பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது உக்ரைன் - ரஷ்யா போர் குறித்த கேள்விக்கு டொனால்ட் ட்ரம்ப் பதில் அளித்தார்.

சி.என்.என்.

No comments:

Post a Comment