சிறுமி மாயம் : பொதுமக்களிடம் உதவி கோரும் பொலிஸார் - News View

About Us

About Us

Breaking

Monday, January 6, 2025

சிறுமி மாயம் : பொதுமக்களிடம் உதவி கோரும் பொலிஸார்

கடந்த நான்கு நாட்களாக காணாமல் போயுள்ள சிறுமி ஒருவரை கண்டுபிடிக்க எட்டம்பிட்டிய பொலிஸார் பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர்.

பதுளை, எட்டம்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர் கடந்த 03 ஆம் திகதியிலிருந்து காணாமல் போயுள்ளதாக எட்டம்பிட்டிய பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.

இதனையடுத்து விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார் காணாமல் போயுள்ள சிறுமியின் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

காணாமல் போயுள்ள சிறுமியின் விபரங்கள்

பெயர்
இரத்நாயக்க முதியன்சேலாகே கவீஷா தெவ்மணி

வயது
16

அங்க அடையாளங்கள்
05 அடி 02 அங்குலம் உயரம்

அவர் இறுதியாக வெளிர் பச்சை நிற நீளமான சட்டை அணிந்திருந்ததாகவும், அவரது இடது கையின் முழங்கைக்கு அருகில் சிறிய வெட்டு காயம் காணப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த புகைப்படத்தில் உள்ள சிறுமி தொடர்பில் ஏதேனும் தகவல்கள் கிடைத்தால் எட்டம்பிட்டிய பொலிஸ் நிலையத்தின் 071-8591528 அல்லது 055-2295466 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment