கொழும்பு கோட்டை கிரிஷ் வீட்டுத் திட்டம் : நாமல் ராஜபக்ஷவும் விசாரணைக்கு உட்படலாம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, January 22, 2025

கொழும்பு கோட்டை கிரிஷ் வீட்டுத் திட்டம் : நாமல் ராஜபக்ஷவும் விசாரணைக்கு உட்படலாம்

கொழும்பு கோட்டை கிரிஷ் சொகுசு வீட்டுத் திட்டத்தில் முதலீடு செய்யப்பட்ட பணம் சட்ட விரோதமாக சம்பாதித்து பெறப்பட்டது என்பது இந்திய நிதி புலனாய்வுத் துறையும் இந்திய அரச அமலாக்கத்துறையும் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்திருப்பதாக, இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன்படி இந்திய நிறுவனமான கிரிஷ் ரியல் டெக் மற்றும் இலங்கையில் கிரிஷ் முதலீட்டை மேற்கொண்ட அமித் கட்டியால் உட்பட பல முதலீட்டாளர்களுக்கு எதிராக இந்திய அமலாக்கத்துறையால் விசாணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியின்போது கொழும்பின் இதயப் பகுதியான கோட்டையில் ஆரம்பிக்கப்பட்ட கோட்டை கிரிஷ் சொகுசு மாடி வீட்டுத் திட்டம் பாதியில் கைவிடப்பட்டது. இந்நிலையில் அத்திட்டம் பற்றி பல சர்ச்சைகள் எழுந்தன.

மேற்கூறிய கிரிஷ் திட்டத்தில் பல நிதி முறைகேடுகள் நடைபெற்றதாக 2015 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கத்தின்போது விசாரணைகள் நடைபெற்று கொழும்பு நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது.

இத்திட்டத்திற்காக கோட்டையிலுள்ள 4.3 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்ததில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மூத்த புதல்வரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவிற்கு ரூபா 70 மில்லியன் பணம் கைமாறியதாக நல்லாட்சி அரசாங்கத்தின் நிதி முறைகேடுகளை விசாரித்த நிதி மோசடி குற்றப் பிரிவு நாமல் ராஜபக்ஷ மீது வழக்கு தொடரப்பட்டு சிறையிலும் அடைக்கப்பட்டிருந்தார்.

No comments:

Post a Comment