புதிய ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் இதுவரை 75 வழக்குகள் பதிவு ! எவரும் முறைப்பாடுகளை ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கலாம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, January 22, 2025

புதிய ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் இதுவரை 75 வழக்குகள் பதிவு ! எவரும் முறைப்பாடுகளை ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கலாம்

புதிதாக அமுல்படுத்தப்பட்ட ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் இதுவரை 75 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு அறிவித்துள்ளது.

2023 இலக்கம் 09 இலஞ்ச எதிர்ப்புச் சட்டம், 2023 செப்டம்பரில் அதிகாரமளிக்கப்பட்டது. புதிய சட்டத்தின் நோக்கங்கள் பிரிவு 03 இல் குறிப்பிடப்பட்டுள்ளன.

நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மையைப் மேம்படுத்துதல், பொறுப்புக் கூறலை அதிகரிக்கவும் மற்றும் சட்டத்தின் கீழ் உள்ள அதிகாரங்கள், செயற்பாடுகளை செயல்படுத்துவதற்கு சுயாதீன ஆணைக்குழுவை நிறுவுதல் என்பவை இவற்றில் பிரதானவையாகும்.

இந்தச் சட்டத்துக்கு இணங்க குற்றச்சாட்டுக்களை அடையாளம் காணவும், விசாரணை செய்யவும் மற்றும் வழக்குத்தாக்கல் செய்யவும் ஆணைக்குழுவுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஊழலுக்கு எதிரான ஐக்கிய நாடுகள் மற்றும் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட ஏனைய விதிமுறைகளை செயல்படுத்துதல் இன்னும் அரச அதிகாரிகளால் சிலர்,சட்டவிரோதமாக பணக்காரர்களாக்கப்படுவதை தடுப்பதற்காகவும் இந்தச் சட்டம் பயன்படுத்தப்படவுள்ளது.

புதிய சட்டத்தின் கீழ், எந்தவொரு நபரும் குற்றச் செயல் தொடர்பான முறைப்பாடு அல்லது தகவலை ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கலாம்.

முறைப்பாடுகளை ஆணைக்குழுவுக்கு வாய் மொழியாகவோ, எழுத்து மூலமாகவோ அல்லது இலத்திரனியல் தொடர்பாடல் மூலமாகவோ சமர்ப்பிக்கலாம்.

No comments:

Post a Comment