சதீக் சலாம்
ஓட்டமாவடி பாத்திமா பாலிகா மகா வித்தியாலயத்தின் புதிய அதிபராகப்பதவியேற்ற ஏ.எல்.அஸ்கர் அவர்களின் பதவியேற்பும் வரவேற்பு நிகழ்வும் பாடசாலை பிரதான மண்டபத்தில் மிகவும் கோலகலமாக இடம்பெற்றது.
கிழக்கு மாகாண கல்வியமைச்சின் செயலாளரினால் அண்மையில் நடாத்தப்பட்ட நேர்முகத்தேர்வின் அடிப்படையில் ஓட்டமாவடி பாத்திமா பாலிகா மகா வித்தியாலத்திற்கு ஏ.எல்.அஸ்கர் கடந்த 16.06.2025ம் திகதி முதல் செயற்படும் வண்ணம் நியமிக்கப்ட்டிருந்தார்.
இதற்கான நியமினக்கடிதத்தினை மட்டக்களப்பு மத்தி வலயக்கல்விப்பணிப்பாளர் MM ஜவாத் அவர்களின் பணிப்புரைக்கமைவாக கோட்டக்கல்விப்பணிப்பளார் ஏ.எம்.தாஹிர் வழங்கி வைத்தார்.
அதற்கான வரவேற்பு மற்றும் பதவியேற்பு நிகழ்வினை பாடசாலை சமூகம் மிகவும் சிறப்பாக நடாத்தியது.
இந்நிகழ்வுக்கு தலைமையேற்று உரையாற்றிய பாடசாலையின் பிரதி அதிபர் சபீனா சுபைர், அதிபர் பல்வேறு வகையான திறன்களைக் கொண்டிருக்க வேண்டும். அதிபர் அவர்களுக்கு எங்களது ஆசிரியர் குழாமின் ஒத்துழைப்பு என்றும் இருக்கும். ஓட்டமாவடி பாத்திமா பாலிகாவின் ஆசிரியர் குழாம் இப்பாடசாலையை வழிநடாத்துவதில் பெரும் பங்காற்றி வருவதாக தனதுரையில் தெரிவித்தார்.
பிரதம அதிதியாகக்கலந்து கொண்ட கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி கோட்டக்கல்விப்பணிப்பாளர் ஏ.எம் தாஹிர் கருத்துத்தெரிவிக்கையில், இது இக்கல்குடா பிரதேசத்தலுள்ள தனியான பெண்கள் உயர்தர 1AD பாடசாலையாகும். இப்பாடசாலை பாடவிதான, இணைப்பாடவிதானச் செயற்பாடுகளிலும் சிறந்த பெறுபேறுகளைப்பெற்று வருகின்றது.
மென்மேலும் சிறந்த அடைவுகளை இவ்வதிபர் காலத்தில் இப்பாடசாலை பெற வேண்டுமெனக்கூறி தனது மனமானர்ந்த வாழ்த்துகளைத்தெரிவித்தார்
இதில் கல்குடா ஜம்இயத்துல் உலமா சபையின் தலைவரும் சிறாஜ் அரபுக்கலாசாலையின் அதிபருமான எம்.ஏ.தாஹிர் ஹாமி உரையாற்றுகையில், இப்பிரபல்யமான பெண்கள் பாடசாலை ஒரு நீணட வரலாற்றைக்கொண்டது. இப்பிரதேசத்தில் பல பன்முக பெண் ஆளுமைகளைத்தந்த ஒரு பாடசாலையாகும். இப்பாடசாலை தொடர்ச்சியாக ஆன்மீக, ஒழுக்க விழுமியங்கியங்களில் சிறந்து விளங்குவதாகக்கூறி புதிய அதிபரை வாழ்த்தினார்.
ஓட்டமாவடி முகைதீன் ஜூம்ஆ பள்ளிவாயல் தலைவர் டாக்டர் எஸ்.ரீ.நஜீப்கான் தனது வாழ்த்தில், ஓட்டமாவடி பாத்திமா பாலிகா மகா வித்தியாலத்திற்கு எமது பிரதேச மக்கள் சார்பாக வாழ்த்துகளைத் தெரிவிப்பதோடு, இப்பெண்கள் பாடசாலைக்குத் தேவையான பங்களிப்பினை முடியுமானளவுக்கு ஓட்டமாவடி முகைதீன் ஜூம்ஆ பள்ளிவாயல் நிர்வாகம் வழங்கத்தயாராகவுள்ளதாகவும் தெரிவித்தார்.
ஓட்டமாவடி பாத்திமா பாலிகா மகா வித்தியாலயத்தின் பாடசாலை நிறைவேற்றுக்குழுத்தலைவர் ஹமீட் உரையாற்றுகையில், இப்பாடசாலைக்கு பல்வேறு சவால்களையும் நயவஞ்சகத்தனத்தையும் சிலர் அரங்கேற்றிய போது பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக்குழு அச்சவால்களை மிகவும் அவதானத்துடன் கையாண்டு வெற்றி கண்டுள்ளது. தற்போதைய அதிபர் நியமனத்திலும் அவ்வாறான செயற்பாட்டை நிறைவேற்ற சிலர் முற்பட்ட போது, அதனை இப்பாடசாலை நிறைவேற்றுக்குழு மிகவும் கச்சிதமாக கையாண்டு தொடர்ச்சியாக ஏ.எல்.அஸ்கரை அதிபராக நியமிப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு அல்லாஹ்வின் உதவியால் வெற்றி கண்டுள்ளது.
ஓட்டமாவடி பாத்திமா பாலிகா மகா வித்தியாலத்தின் ஆசிரியர்கள் சார்பான வாழ்த்துப்பா அஷ்ஷெய்க் ஏ.எம்.அன்சார் மௌலவி அவர்களினால் வாசிக்கப்பட்டதுடன், அவ்வாழ்த்துப்பாவினை அதிதியாகக் கலந்து சிறப்பித்த கோறளைப்பற்று மேற்கு, கோட்டக்கல்விப்பணிப்பாளர் ஏ.எம்.தாஹிர் அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.
முன்னாள் கோட்டக்ல்விப்பணிப்பாளர் ஏ.எம்.ஏ.காதர் அவர்களினால் சிறப்புப்பாடல் அறங்கேற்றப்பட்டது.
இதில் பிரதி அதிபர்களான திருமதி சபீனா சுபைர் மற்றும் திருமதி எம்.ஏ.சி.பௌசியா ஆகியோர்களுக்கும் நினைவுப்பரிசில்கள் வழங்கி அவர்களது பணிகளும் பாராட்டிக்கௌரவிக்கப்பட்டது.
நினைவுப்பரிசில்கள் முன்னாள் அதிபர் செயினம்பு ஹமீட் அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.
அத்துடன், மட்டக்களப்பு மத்தி வலயக்கல்விப் பணிமனையின் உதவிக்கல்விப்பணிப்பாளரும் ஏறாவூர் கோட்ட பாடசாலைகளுக்கான கோட்டக்கல்விப் பணிப்பாளருமான ஏ.எல்.அபுல்ஹசன் விசேட அதிதியாகக்கலந்து சிறப்பித்தார்
அத்துடன், இந்நிகழ்வை இப்பாடசாலையின் பழைய மாணவ சங்கச்செயலாளரான பாத்திமா ஹசீனா, அதன் அங்கத்தவர்கள், ஓட்டமாவடி வர்த்தக சங்கத்தலைவர் முகம்மட் முபாரக், செயலாளர் முகம்மட் நௌசாத், கிராம அபிவிருத்திச்சங்கத்தலைவர் முகம்மட் ஜாபிர், மாதர் அபிவிருத்திச்சங்க தலைவி பாத்திமா அஸ்மியா, அதன் அங்கத்தவர் ஜரீனா, கல்குடா டைவர்ஸ் அனர்த்த அவசர சேவையின் பணிப்பாளரும் ஓட்டமாவடி முகைதீன் ஜும்ஆ பள்ளிவாயல் நம்பிக்கையாளர் சபை உறுப்பினருமான அல்-ஹாஜ் எம்.எம்.முபாரக் மற்றும் பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக்குழுவின் அங்கத்தவர்கள், பாடசாலை ஆசிரிய, ஆசிரியைகள், பாடசாலை மாணவிகள் எனப்பலர் கலந்து சிறப்பித்திருந்தனர்.
No comments:
Post a Comment