நாட்டுக்கு வந்த தென் கொரிய மற்றும் அவுஸ்திரேலிய முதலீட்டாளர்களிடம் முன்னாள் அமைச்சர்கள் இருவர் கப்பம் கோரியதால், தமது முதலீடுகளை கைவிட்டதாக தென் கொரிய மற்றும் அவுஸ்திரேலிய தூதுவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால், அந்த முதலீடுகளை இந்தியா மற்றும் வியட்நாமுக்கு கொண்டு சென்றதாகவும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்திடம் இதுபற்றி அவர்கள் உத்தியோகபூர்வமாக முறையிட்டுள்ளனர்.
வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் அண்மையில் தென் கொரிய தூதுவர் மியோன் லீ மற்றும் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் பால் ஸ்டீவன் ஆகியோரைச் சந்தித்திருந்தார்.
இதன்போதே அவர்கள் இந்த முறைப்பாடுகளை அமைச்சரிடம் முன்வைத்தனர்.
தென் கொரிய தூதுவர் மேலும் கூறுகையில், முத்துராஜவெலயிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு குழாய் மூலம் எரிபொருளைக் கொண்டு செல்வதற்காக அழைக்கப்பட்ட திறந்த டெண்டரை, தனது நாட்டைச் சேர்ந்த முதலீட்டாளர் பெற்றதாகவும் ஆனால் இந்தத் திட்டத்தை செயல்படுத்த அனுமதி வழங்கவில்லையெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment