கொழும்பின் சில பகுதிகளுக்கு 12 மணித்தியால நீர் வெட்டு - News View

About Us

About Us

Breaking

Wednesday, January 15, 2025

கொழும்பின் சில பகுதிகளுக்கு 12 மணித்தியால நீர் வெட்டு

கொழும்பின் சில பகுதிகளில் நாளை (16) வியாழக்கிழமை 12 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை (NWSDB) அறிவித்துள்ளது.

அதற்கமைய, கொழும்பு 12, 13, 14, 15 ஆகிய பகுதிகளுக்கு நாளை (16) மாலை 6.00 மணி முதல் ஜனவரி 17 ஆம் திகதி காலை 6.00 மணி வரை நீர் விநியோகம் தடைப்படும் என சபை தெரிவித்துள்ளது.

கொழும்பிற்கு நீர் வழங்கும் பிரதான குழாயின் அத்தியாவசிய பராமரிப்பு பணி காரணமாக இவ்வாறு நீர் வெட்டு அமுல்படுத்தப்படுமென சபை சுட்டிக்காட்டியுள்ளது.

No comments:

Post a Comment