அரசியல் இலஞ்சமாக வழங்கப்பட்ட மதுபானசாலை அனுமதிப்பத்திரங்கள் இரத்துச் செய்யப்படுமா ? - கேள்வியெழுப்பிய சாணக்கியன் - News View

About Us

About Us

Breaking

Thursday, December 5, 2024

அரசியல் இலஞ்சமாக வழங்கப்பட்ட மதுபானசாலை அனுமதிப்பத்திரங்கள் இரத்துச் செய்யப்படுமா ? - கேள்வியெழுப்பிய சாணக்கியன்

(எம்.ஆர்.எம். வசீம், இராஜதுரை ஹஷான்)

கடந்த அரசாங்கத்தில் அரசியல் இலஞ்சமாக வழங்கப்பட்ட 361 மதுபானசாலை அனுமதிகளின் உரிமையாளர்கள், சிபார்சு செய்தவர்கள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்படுமா? வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரங்கள் இரத்துச் செய்யப்படுமா? என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் அரசாங்கத்திடம் கேள்வியெழுப்பினார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (05) நடைபெற்ற அமர்வின்போது ஒழுங்குப் பிரச்சினை முன்வைத்து மேற்கண்டவாறு கேள்வியெழுப்பினார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது, கடந்த அரசாங்கத்தால் அரசியல் இலஞ்சமாக மதுபானசாலைகளுக்கான அனுமதிகளை பெற்றவர்களின் விபரங்களை அரசாங்கம் சபையில் சமர்ப்பித்தமை பாராட்டுக்குரியது.

அதேவேளை இந்த மதுபானசாலைகளின் உரிமையாளர்கள், இவற்றுக்கான அனுமதிகளுக்கு சிபார்சு செய்தவர்கள் தொடர்பில் அரசு விசாரணை நடத்துமா? அத்துடன் அரசியல் இலஞ்சமாக வழங்கப்பட்ட இந்த மதுபானசாலைகளுக்கான அனுமதிகளை அரசாங்கம் இரத்துச் செய்யுமா?

இந்த 361 மதுபானசாலைகளுக்கான அனுமதிகள் தொடர்பில் பொதுமக்கள் எம்மிடம் இவ்விடயம் குறித்து வினவுகிறார்கள். ஆகவே அரசாங்கம் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து விளக்கமளிக்க வேண்டும் என சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்னாயக்கவிடம் கோரினார். எனினும் அரச தரப்பில் இருந்து எவரும் பதிலளிக்கவில்லை.

No comments:

Post a Comment