சதொச ஊடாக ரூ. 130 இற்கு விற்பனை செய்யப்படும் தேங்காய் மற்றும் சந்தைக்கு விநியோகிக்கப்படும் அரிசி நேற்று முதல் (05) சதொச விற்பனை நிலையங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக லங்கா சதொச தலைவர் கலாநிதி சமித்த பெரேரா தெரிவித்துள்ளார்.
ஒருவருக்கு 3 தேங்காய் மற்றும் 5 கிலோ அரிசியை கொள்வனவு செய்து கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி நேற்று கொழும்பை சுற்றியுள்ள சதொச கிளைகளிலும், இன்று (06) முதல் கொழும்பிற்கு வெளியே உள்ள சதொச கிளைகளிலும் தேங்காய் மற்றும் அரிசியை கொள்வனவு செய்ய முடியும்.
No comments:
Post a Comment