யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் அதிகாரிகளுடன் தர்க்கம் புரிந்த அருச்சுனா எம்.பி - News View

About Us

Add+Banner

Friday, December 13, 2024

demo-image

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் அதிகாரிகளுடன் தர்க்கம் புரிந்த அருச்சுனா எம்.பி

%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-780x470%20(Custom)
அரச அதிகாரிகளின் கல்வி தகைமைகளை கேள்விக்கு உட்படுத்தி, நாடாளுமன்ற உறுப்பினர் செயற்பட்டமையால், அரச அதிகாரிகள் தமது கண்டனங்களை யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் பதிவு செய்தனர்.

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை (13) மாவட்ட செயலகத்தில் நடைபெற்றபோது, அரச அதிகாரிகளால் திட்டங்கள் முன் மொழியப்பட்டு, அது தொடர்பில் விளக்கங்கள் அளிக்கப்பட்டன.

குறித்த கூட்டத்தில் இம்முறை நாடாளுமன்றம் தேர்வு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் அர்ச்சுனா அதிகாரிகளை விழித்த வார்த்தைகள் சபை ஒழுங்குக்கும் கூட்டம் ஒழுங்குக்கும் முரணாக இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அத்துடன், யாழ் மாவட்டத்தில் திட்டங்களை வகுக்கும்போது உங்கள் கல்வி அறிவு போதாது என அதிகாரிகளை விமர்சித்ததுடன் அவ்வாறு தேவைப்பட்டால் என்னிடம் வாருங்கள் கற்றுத் தருகிறேன் என சாடியுள்ளார்.

அதன்போது இடையில் குறுக்கிட்டு, கேள்விகளை கேட்டதுடன், அவர்களின் கல்வி தகமைகளையும் கேள்விக்கு உட்படுத்தினார். அதானல் சில அதிகாரிகள் அவரின் கேள்விகளை செவிமடுக்காது தமது விளக்கங்களை கூறி சென்றனர்.

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *