அடுத்த ஆண்டுக்கான ஓய்வூதியம் வழங்கும் திகதியை ஓய்வூதிய திணைக்களம் அறிவித்துள்ளது.
இதனடிப்படையில், ஜனவரி, பெப்ரவரி, மார்ச், செப்டம்பர், ஒக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் பத்தாம் திகதி ஓய்வூதியம் வழங்கப்படவுள்ளது.
அத்தோடு, ஏப்ரல், மே, ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் ஓய்வூதியம் ஒன்பதாம் திகதி வழங்கப்படவுள்ளது.
இதேவேளை, ஒகஸ்ட் மாதம் மாத்திரம் ஏழாம் திகதி ஓய்வூதிய கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.
ஓய்வூதிய திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஜகத் டயஸின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில் இவை குறிப்பிடப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment