உலகப் பாரம்பரியச் சின்னமாக விளங்கும் சிகிரியாவின் பாதுகாப்பு நடவடிக்கைகளை விரிவுபடுத்தவும், சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் சிறப்புத் திட்டத்தை செயல்படுத்தவும் கொரிய சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் முன்மொழிந்துள்ளது.
சிகிரியாவுக்கு செல்லும் வீதி அபிவிருத்தி, மாற்று வீதிகள் அமைத்தல், சிகிரியா அருங்காட்சியகம், உணவகம் மற்றும் பற்றுச்சீட்டு பெறும் இடங்கள் உள்ளிட்ட பல இடங்கள் இத்திட்டத்தில் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.
இத்திட்டத்துக்கென 2.4 பில்லியன் ரூபா மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் ஆலோசனையின் பிரகாரம் மத்திய கலாசார நிதியத்துக்கும் கொரிய சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்துக்குமிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை கைச்சாத்திடவும் முன்மொழியப்பட்டுள்ளது.
இது தொடர்பான கலந்துரையால் கடந்த (27) புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி தலைமையில் நடைபெற்றது.
No comments:
Post a Comment