புதிய இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ நியமிக்கப்பட்டுள்ளார்.
அதற்கமைய இலங்கையின் 25ஆவது இராணுவத் தளபதியாக அவர் செயற்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
குறித்த பதவியில் இருந்த லெப்டினன்ட் ஜெனரல் விகும் லியனகே ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து குறித்த பதவியில் அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, கடற்படைத் தளபதியாக காஞ்சன பானகொட நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கையின் 26ஆவது கடற்படைத் தளபதியாக அவர் செயற்படவுள்ளார்.
இலங்கையின் 25ஆவது கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவின் இடத்திற்கு அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான நியமனக் கடிதங்கள் இன்று (30) ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து கையளிக்கப்பட்டன.
இராணுவத் தளபதி ஜெனரல் விக்கும் லியனகே மற்றும் கடற்படைத் தளபதி அட்மிரல் பிரியந்த பெரேரா ஆகியோர் நாளை (31) தமது பதவிகளில் இருந்து ஓய்வு பெறுகின்றனர்.
No comments:
Post a Comment