இறுதி நாள் இன்று ! இதுவரை 1,985 பேர் மாத்திரமே சமர்பிப்பு - News View

About Us

About Us

Breaking

Friday, December 6, 2024

இறுதி நாள் இன்று ! இதுவரை 1,985 பேர் மாத்திரமே சமர்பிப்பு

பாராளுமன்றத் தேர்தல் செலவு அறிக்கைகளை வழங்குவதற்கான காலக்கெடு இன்று (06) நள்ளிரவுடன் முடிவடைவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஈ.எல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு விசேட அறிக்கையொன்றை விடுத்துள்ள அவர், தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களில் 1,985 பேர் மாத்திரமே இதுவரையில் உரிய அறிக்கைகளை சமர்ப்பித்துள்ளனர்.

அத்துடன், தேசியப்பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ள 527 வேட்பாளர்களில் 57 பேர் மாத்திரமே அறிக்கைகளை வழங்கியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஈ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment