பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவின் பிடியாணையை மீளப் பெற உத்தரவு - News View

About Us

About Us

Breaking

Thursday, November 28, 2024

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவின் பிடியாணையை மீளப் பெற உத்தரவு

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா மீதான பிடியாணையை மீளப் பெறுவதற்கான உத்தரவை கொழும்பு மேலதிக நீதவான் கேமிந்த பெரேரா இன்று(28) பிறப்பித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஊடாக நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்து நீதிமன்றத்தில் முன்னிலையாகியதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த 26ஆம் திகதி பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவிற்கு எதிராக யாழ். பிராந்தியத்திற்கு  பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஊடாக பிடியாணை பிறப்பிப்பதற்கு நீதவானால் உத்தரவிடப்பட்டது.

கொழும்பு, பேஸ்லைன் பகுதியில் காரொன்றை விபத்திற்குட்படுத்தி சாரதியை தாக்கி காயமேற்படுத்திய சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்காக நீதிமன்றத்தில் முன்னிலையாவதை தொடர்ச்சியாக நிராகரித்தமையால் அவருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.

2021ஆம் ஆண்டு மார்ச் மாதம் 22ஆம் திகதி இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அடுத்த வழக்கு விசாரணையை அடுத்த வருடம் மார்ச் மாதம் 4ஆம் திகதி முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
 
சந்தேகத்திற்குரிய பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தொடர்ச்சியாக நீதிமன்றங்களைத் தவிர்த்து வருவதனால் இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.

No comments:

Post a Comment