இலங்கை சட்டக் கல்லூரிக்கான நுழைவுப் பரீட்சை ஒத்தி வைப்பு - News View

About Us

About Us

Breaking

Thursday, November 28, 2024

இலங்கை சட்டக் கல்லூரிக்கான நுழைவுப் பரீட்சை ஒத்தி வைப்பு

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக உயர்தர பரீட்சை மேலும் மூன்று நாட்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் மேலும் இரண்டு அரச பரீட்சைகள் பிற்போடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

2024 ஆம் ஆண்டுக்கான இலங்கை சட்டக் கல்லூரி பொது நுழைவுப் பரீட்சை மற்றும் சனத் தொகை மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் சிரேஷ்ட புள்ளிவிபரவியலாளர்கள் முதலாவது வினைத்திறன் காண் பரீட்சை - 2016 (2024) பிற்போடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர அறிவித்தார்.

இன்று (28) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமித் ஜயசுந்தர, இந்த பரீட்சைகள் டிசம்பர் மாதம் 01 மற்றும் 02 ஆம் திகதிகளில் திட்டமிடப்பட்டிருந்ததாகவும், நாட்டின் பல பாகங்களில் இருந்து பரீட்சார்த்திகள் பரீட்சைகளுக்காக கொழும்புக்கு சமூகமளிக்க இருந்ததாகவும் கூறினார்.

எனினும், சீரற்ற வானிலையினால் பல்வேறு பிரதேசங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளமையினால், இரண்டு பரீட்சைகளையும் ஒத்திவைப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

பரீட்சைகளின் மீள் திட்டமிடப்பட்ட திகதிகள் விரைவில் அறிவிக்கப்படும் என அமித் ஜயசுந்தர மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment