யாழில் வேட்பாளரின் வீட்டுக்குள் நுழைந்து வன்முறைக் கும்பல் தாக்குதல் - தந்தை காயம் - News View

About Us

About Us

Breaking

Tuesday, November 12, 2024

யாழில் வேட்பாளரின் வீட்டுக்குள் நுழைந்து வன்முறைக் கும்பல் தாக்குதல் - தந்தை காயம்

யாழ்ப்பாணத்தில் சுயேட்சையாக போட்டியிடும் வேட்பாளர் ஒருவரின் தந்தை மீது தாக்குதல் நடதப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலின்போது காயங்களுக்குள்ளான நிலையில் வேட்பாளரின் தந்தை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது, கொழும்புத்துறை - நெளுக்குளம் பகுதியில் அமைந்துள்ள சுயேட்சைக்குழு வேட்பாளர் ஒருவரின் வீட்டிற்குள் செவ்வாய்க்கிழமை (12) மாலை வன்முறைக் கும்பலொன்று அத்துமீறி உள்நுழைந்துள்ளது.

அங்கு வேட்பாளரின் தந்தையின் தலையில் இரும்பு கம்பியால் தாக்கிய அதேவேளை வீட்டின் யன்னல் கண்ணாடி மற்றும் மோட்டார் வாகனத்தின் மீதும் வன்முறைக் கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது.

மேலும் அயல் வீட்டின் மீதும் தாக்குதலை நடாத்தி விட்டு தப்பி சென்றதுள்ளதுடன் குறித்த வீட்டில் வசிக்கும் இளைஞரின் கை மீதும் வாள் வெட்டு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்த விசேட அதிரடிப் படையினர் மற்றும் யாழ்ப்பாணம் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment