கிராண்ட்பாஸ் துப்பாக்கிச் சூடு : துப்பாக்கிதாரி உள்ளிட்ட இருவர் கைது - News View

About Us

About Us

Breaking

Thursday, October 31, 2024

கிராண்ட்பாஸ் துப்பாக்கிச் சூடு : துப்பாக்கிதாரி உள்ளிட்ட இருவர் கைது

கடந்த இரு வாரங்களுக்கு முன்னதாக கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாதம்பிட்டி மயானத்திற்கு முன்னால் முச்சக்கர வண்டியில் சென்ற நபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் 2 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஒக்டோபர் 16ஆம் திகதி இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் கிராண்ட்பாஸ் பொலிஸார் மற்றும் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினர் முன்னெடுத்த விசாரணைகளுக்கமைய குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதற்கமைய, குறித்த துப்பாக்கிச் சூட்டுக்காக சந்தேகநபர்கள் வந்த காரை செலுத்திய 35 வயதுடைய புளூமெண்டல் பகுதியைச் சேர்ந்த சந்தேகநபரொருவர் கடந்த திங்கட்கிழமை (28) கிராண்ட்பாஸ் பொலிஸ் நிலைய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட அவர்கள், துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபர் நேற்று (31) மாலை வத்தளை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். .

இரண்டு கைத்தொலைபேசிகளுடன் கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபர் ​ஹெந்தல, வத்தளை பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

​​வெளிநாட்டில் இருந்து திட்டமிட்ட குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் ஒருவருடன் குறித்த சந்தேகநபர் தொடர்பில் இருந்ததாகவும், அவரது வழிகாட்டலுக்கமைய குறித்த குற்றத்தை மேற்கொண்டுள்ளதாகவும் இது தொடர்பில் மேற்கொண்ட மேலதிக விசாரணைகளின்போது தெரியவந்துள்ளது.

மேலதிக விசாரணைகளை, கிராண்ட்பாஸ் பொலிஸார் மற்றும் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment