பல்கலைக்கழக மாணவர்கள் பயணித்த பஸ் விபத்து : இருவர் மரணம், 35 பேர் வைத்தியசாலையில் அனுமதி - News View

About Us

About Us

Breaking

Thursday, October 31, 2024

பல்கலைக்கழக மாணவர்கள் பயணித்த பஸ் விபத்து : இருவர் மரணம், 35 பேர் வைத்தியசாலையில் அனுமதி

பதுளை - துன்ஹிந்த 4 ஆவது மைல்கல் பகுதியில் பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், 35 பேர் காயடைந்துள்ளனர். விபத்திற்குள்ளாகும்போது குறித்த பஸ்ஸில் 40 பேர் பயணித்துள்ளனர்.

கொழும்பு - கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் சுற்றுலா சென்ற பஸ் ஒன்றே வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்தானது, இன்று (01) காலை 7.45 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்து சம்பவத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment