அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தமது முயற்சியின் விளைவாக இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.
அவர் இந்த செய்தியை “தன்னால் ஏற்படுத்தப்பட்ட மிகப்பெரிய அமைதிப் புரட்சி” என வர்ணித்துள்ளார்.
இருப்பினும், இந்த அறிவிப்பை இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய இரு தரப்பும் அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.
“இஸ்ரேல் தாக்குதல்களை நிறுத்தினால் நாங்களும் நிறுத்துவோம்” என ஈரானின் வெளியுறவுத்துறை பேச்சாளர் தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், அமெரிக்கா - இஸ்ரேல் - ஈரான் பதற்றத்தின் இடையில், கட்டாரிலுள்ள அமெரிக்க தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது.
இத்தாக்குதல்கள் தமது அணுசக்தி நிலையங்கள் மீது தாக்க அமெரிக்கா பயன்படுத்திய வெடிகுண்டின் அளவிற்கு சமமானது என அறிவித்துள்ள ஈரான், குறித்த தாக்குதல்கள் மக்கள் நடமாட்டம் அற்ற பகுதிகளில் அமைந்த அமெரிக்க இராணுவ தளங்களை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
No comments:
Post a Comment