எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகின.
இதற்கமைய, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி (NPP) எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது.
காலி மாவட்டம், எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று (26) சனிக்கிழமை காலை 7 மணிக்கு ஆரம்பமாகி மாலை 4 மணிக்கு நிறைவடைந்தது.
இன்றைய வாக்களிப்பு 48 நிலையங்களில் இடம்பெற்றதுடன், இம்முறை எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலில் 55,643 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர்.
30 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக அங்கீகரிக்கப்பட்ட 8 அரசியல் கட்சிகளும், 1 சுயேச்சைக் குழுவும் இன்று தேர்தலில் போட்டியிட்டன.
தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் முடிவுகள் வெளியாகியுள்ளன.
தேசிய மக்கள் சக்தி
வாக்குகள் : 17,295
ஆசனங்கள் : 15
ஐக்கிய மக்கள் சக்தி
வாக்குகள் : 7,924
ஆசனங்கள் : 06
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன
வாக்குகள் : 3,597
ஆசனங்கள் : 03
பொதுஜன ஐக்கிய முன்னணி
வாக்குகள் : 2612
ஆசனங்கள் : 02
சுயேட்சை குழு
வாக்குகள் : 2568
ஆசனங்கள் : 02
பொதுஜன ஐக்கிய சுதந்திர முன்னணி
வாக்குகள் : 1350
ஆசனங்கள் : 01
தேசிய மக்கள் கட்சி
வாக்குகள் : 521
ஆசனங்கள் : 01
No comments:
Post a Comment