இஸ்ரேலில் 5,000 வேலை வாய்ப்புகள் ! உடனடியாக பதிவு செய்யுங்கள் - News View

About Us

About Us

Breaking

Sunday, October 27, 2024

இஸ்ரேலில் 5,000 வேலை வாய்ப்புகள் ! உடனடியாக பதிவு செய்யுங்கள்

இஸ்ரேலில் நிர்மாணத்துறை சார்ந்த 5,000 வேலை வாய்ப்புகள் இலங்கைக்கு கிடைத்துள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

இவ்வேலை வாய்ப்பினூடாக மாதாந்தம் சுமார் 05 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமாக சம்பாதிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

25 வயதுக்கும் 45 வயதுக்கும் இடைப்பட்ட, நிர்மாணத் துறையில் அனுபவமுள்ளவர்கள் இவ்வேலை வாய்ப்புகளுக்கு உடன் விண்ணப்பிக்க முடியுமென வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

இதன்படி, கட்டட புனர்நிர்மாணத் துறையில் 4,000 தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்புகளும், மேசன் தொழில் துறையில் 500 வேலை வாய்ப்புகளும், (டைல்ஸ்) தரை ஓடுகள் பதிப்புத்துறையில் 500 வேலை வாய்ப்புகளும் கிடைத்துள்ளன.

இத்தொழில் வாய்ப்புகளுக்காக இத்துறைகளில் அனுபவம் உள்ளவர்கள் www.slbfe.lk என்ற இணையத்தளத்தினூடாக இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தில் உடனடியாக பதிவு செய்யுமாறும் பணியகம் சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன், இவ்வாறான வேலை வாய்ப்புகளை வழங்குவதாக கூறி, பல்வேறு நபர்கள் பணம் வசூலிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளதால், பணியகத்துக்கு தெரியாமல் எவரிடமும் பணம் கொடுக்க வேண்டாமென பணியகத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தற்போது, ​​இலங்கையில் இருந்து பல புலம்பெயர் தொழிலாளர்கள் தாதியர் மற்றும் விவசாயத் துறையில் வேலை வாய்ப்புகளுக்காக இஸ்ரேலுக்குச் சென்றுள்ளனர்.

அவர்களில் சிலர் மாதாந்தம் 10 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமாக சம்பளம் பெறுவதாக அந்தப் பேச்சாளர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment