பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான தீபாவளி முற்பணம் 10,000 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
துறைசார் அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இது தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரச பெருந்தோட்ட நிறுவனம், எல்கடுவ பெருந்தோட்ட நிறுவனம் மற்றும் மக்கள் பெருந்தோட்ட அபிவிருத்தி சபையின் கீழுள்ள பெருந்தோட்டங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு இந்த முற்பணம் வழங்கப்படும்.
ரூ.10,000 ஆக காணப்பட்ட பண்டிகை கால முற்பணம் தற்போது ரூ.20,000 ஆக வழங்கப்படும்.
வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, பொருளாதார நெருக்கடி என்பவற்றை கவனத்திற்கொண்டு இந்த தொகை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பெருந்தோட்ட மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, நாளைய தினம் கொண்டாடப்படவுள்ள தீபாவளி பண்டிகைகான பொருட் கொள்வனவுக்காக நாட்டின் பல பகுதிகளில் மக்கள் நடமாட்டம் அதிமாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், மக்கள் தமது உடமைகள் குறித்து அவதானத்துடன் செயற்படுமாறு காவல்துறையினரால் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment