மட்டக்குளி பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரிக்கு ரூ. 50,000 வழங்க முயன்ற சந்தேகநபர், இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்றையதினம் (16) குறித்த பொலிஸ் அதிகாரிக்கு தொலைபேசியில் அழைத்த சந்தேகநபர், குறித்த பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட வாய்ப்பு வழங்குமாறு கோரியுள்ளதோடு, இதற்காக மாதாந்தம் ரூ. 100,000 பணத்தை இலஞ்சமாகத் தர முடியுமென குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு அறிவித்த குறித்த பொலிஸ் அதிகாரி, குறித்த நபரை பொலிஸ் நிலையத்திற்கு வரவழைத்திருந்தார்.
இதன்போது, ரூ. 50,000 பணத்தை வழங்க முயன்ற வேளையில் இலஞ்ச ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் 50 வயதான மட்டக்குளி பிரதேசத்தைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment