நாளை எல்பிட்டிய பிரதேச சபைக்கான தேர்தல் : 48 வாக்குச் சாவடிகள், 55,643 வாக்காளர்கள் - News View

About Us

About Us

Breaking

Friday, October 25, 2024

நாளை எல்பிட்டிய பிரதேச சபைக்கான தேர்தல் : 48 வாக்குச் சாவடிகள், 55,643 வாக்காளர்கள்

எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலுக்கு தேவையான அனைத்து தேர்தல் உத்தியோகத்தர்கள், வாக்குச் சீட்டுகள் மற்றும் ஏனைய உபகரணங்கள் இன்று அந்தந்த வாக்களிப்பு நிலையங்களுக்கு கொண்டுசெல்லப்படும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

48 வாக்குச் சாவடிகளில் மொத்தம் 55,643 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதாகவும், 2018ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பதிவுப் பட்டியலின்படி வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எல்பிட்டிய பிரதேச சபைக்கான தேர்தல் நாளை (ஒக்டோபர் 26) காலை 7.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை நடைபெறவுள்ளது.

தேர்தலுக்கு தேவையான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment