இதுவரை 269 முறைப்பாடுகள் பதிவு - News View

About Us

About Us

Breaking

Saturday, August 10, 2024

இதுவரை 269 முறைப்பாடுகள் பதிவு

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் நேற்று (09) நூற்றுக்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்த முறைப்பாடுகள் அனைத்தும் தேர்தல் விதிமுறைகளை மீறியமை தொடர்பானவை என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இதுவரை (ஜூலை 31 ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 09 ஆம் திகதி வரை) 269 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி, தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 189 முறைப்பாடுகளும், மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 77 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.

மேலும், மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் ஒரு முறைப்பாடும் ஏனைய விடயங்கள் தொடர்பில் இரண்டு முறைப்பாடுகளும் கிடைக்கப் பெற்றுள்ளன.

No comments:

Post a Comment