இலங்கை போக்குவரத்து சபை பஸ்களில் மாணவர்களுக்கான பருவகாலச்சீட்டுகள் வழங்குவதை அன்று இரத்து செய்ய முயற்சித்தபோது, நானும் அமைச்சர் பந்துலவும் நீதிமன்றத்துக்கு சென்றோம். இது மக்களுக்குச் சொந்தமானதென்றும் அதனைப் பாதுகாக்குமாறும் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதனால், இலட்சக் கணக்கான மாணவர்களின் பருவகாலச்சீட்டு வழங்கும் முறை பாதுகாக்கப்பட்டதாக பிரதமர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்தார்.
இலங்கை போக்குவரத்துச் சபைக்கு ஆட்சேர்ப்புச் செய்யும் வேலைத்திட்டமொன்று பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் நேற்று (09) அலரி மாளிகையில் நடைபெற்றது.
இங்கு கருத்து தெரிவித்த பிரதமர், “1957 ஆம் ஆண்டு இலங்கை போக்குவரத்துச் சபையை மக்கள் மயப்படுத்துவதற்கு பண்டாரநாயக்கவின் தலைமையில் அரசாங்கத்தை அமைத்து, அந்த சட்டமூலத்தை பிலிப் குணவர்தன பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார். அப்போது இலங்கை போக்குவரத்துச் சபையை மக்கள் மயப்படுத்துவதனை கட்டம் கட்டமாக மேற்கொள்ள வேண்டும் என்று பாராளுமன்றத்தில் வாதப்பிரதிவாதங்கள் இருந்தன. பிலிப் குணவர்தன கூறியது போல், ஒரே நாளில் மேற்கொள்ள வேண்டும் என்ற தலைப்பில் இலங்கை முழுவதும் உள்ள டிப்போ ஊழியர்கள் இரவோடிரவாக மக்கள் மயப்படுத்தப்பட்டது.
பண்டாரநாயக்கா, தேசிய மயமாக்கிய முதல் பஸ் இன்னும் உள்ளது. தொலைதூர கிராமங்களில் உள்ள மக்களின் அன்றாட போக்குவரத்து மற்றும் சிறிய பொருட்களின் போக்குவரத்திற்கு இ.போ.ச. ஒரு பெரிய சக்தியாக உள்ளது எப்போதும் பொருளாதாரத்தில் மிக முக்கியமான பங்கை அது வகிக்கிறது. பாடசாலை சேவைக்கு நாம் முன்னுரிமை அளித்துள்ளோம்.
இ.போ.சவின் முன்னேற்றத்திற்கு ஒரு பாரிய பலம் உள்ளதாக நாங்கள் நம்புகிறோம். பிள்ளைகளுக்கு கொடுக்கக்கூடிய சிறந்ததைக் கொடுக்கும் திறன் எங்களிடம் உள்ளது. நானும் நீண்ட காலத்திற்கு முன்பு இலங்கை போக்குவரத்துச் சபைக்குப் பொறுப்பான அமைச்சராக இருந்தேன். அந்தக் காலத்திலும் இது போன்ற பல கோரிக்கைப் போராட்டங்கள் நடந்தன. அவற்றை ஒவ்வொன்றாக ஒவ்வொரு தொழிற்சங்கத்துடனும் பேசித் தீர்க்க முடிந்தது. குறிப்பாக, பணிக்கொடை இ.போ.ச. அனுபவிக்கும் ஒரு முக்கியமான நன்மையாகும். அத்தகைய சிறப்பான சூழ்நிலையை உருவாக்குவதற்கு எமக்கு முடியுமாக இருந்தது.
எனவே, இந்த நிறுவனத்தை நாம் குறிப்பாக பாதுகாக்க வேண்டும். எமது போக்குவரத்துத் துறையின் முதுகெலும்பாக திகழும் இந்த இ.போ.சபை பஸ்களே மக்கள் அன்றாடம் பயணிக்கும் முக்கிய போக்குவரத்து சாதனம். அபிவிருத்தி, முன்னேற்றம் என்று எவ்வளவுதான் பேசினாலும் இன்றும் கூட பெரும்பாலானோர் பேருந்துகளில்தான், பயணிக்கின்றனர். இதுதான் யதார்த்தம். இந்த முதுகெலும்பை பாதுகாத்தால், தொலைதூர கிராமங்களில் உள்ள பேருந்துகள் தொடர்ந்தும் இயங்கும். எனவே, இதை நாம் பாதுகாக்க வேண்டும்”."
No comments:
Post a Comment